என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் கூகுள் பே, போன் பே  மூலம் பணம் செலுத்தும் வசதி
    X

    ரேஷன் கடைகளில் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தும் வசதி

    • அனைத்து ரேஷன் கடைகளிலும் யூ.பி.ஐ., கியூ.ஆர். கோடு மூலம் ரொக்க மில்லா பண பரிவர்த்தனை வசதி
    • கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடை களில் பே.டி.எம்., கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ. வசதிகள் மூலம் பணம் பரி மாற்றம்

    சேலம்:

    தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 35 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களும், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்க ளும் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் கூட்டு றவுத்துறை மூலம் செயல்ப டும் அனைத்து ரேஷன் கடைகளிலும் யூ.பி.ஐ., கியூ.ஆர். கோடு மூலம் ரொக்க மில்லா பண பரிவர்த்தனை வசதிகளை ஏற்படுத்த கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக இணை பதிவாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடை களில் பே.டி.எம்., கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ. வசதிகள் மூலம் பணம் பரி மாற்றம் செய்வதற்கு தேவை யான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் யு.பி.ஐ. வசதி மூலம் ரொக்கமற்ற பண பரிவர்த்தனை மேற்கொள் ளப்படுவதை உறுதி செய்து அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களிலும் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை தரவும் யு.பி.ஐ. வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பேடிஎம் நிறு வனத்துடன் மாத கட்ட ணத்தில் ரொக்கமற்ற பண பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து ரேஷன் கடை களிலும் யு.பி.ஐ. முறை மூலம் ரொக்கமற்ற பண பரிவர்த்தனை மேற்கொள் ளப்படுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள் ளும் போது, பே.டி.எம். நிறுவனத்தின் கட்டண விவரங்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ள. இதை அடுத்து அனைத்து ரேஷன் கடைகளி லும் ரொக்கமற்ற பண பரி வர்த்தனை செய்ய நடவடிக் கைகள் தொடங்கி யுள்ளன. இதனால் விரைவில் அனைத்து ரேஷன் கடைகளி லும் மின்னணு பண பரி மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×