என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம். இன்று காலை இளம்பிள்ளையை சேர்ந்த டிரைவர் முனிப்பன் என்பவர், பண்ருட்டியில் இருந்து லாரியில் பலாப்பழம் ஏற்றிக்கொண்டு சேலம் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பலாபழங்கள் ரோட்டில் சிதறியது.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

    இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.
    • தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    மேட்டூர்:

    ஈேராடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சேலம் மாவட்டம் தாரமஙகலம் அருகே உள்ள செலவடை பகுதிைய சேர்ந்த வல்லரசு (23), கார்த்திக் (26) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிந்தனர்.

    தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான வல்லரசு, கார்த்திக் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முத்துசாமி (46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்- சி, டி தரத்திலான பதவிகளுக்கு இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.
    • ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022-க்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    சேலம்:

    மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப்- சி, டி தரத்திலான பதவிகளுக்கு இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பு தரத்திலான பதவி இடங்களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022-க்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதையடுத்து டயர் -1 தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வான டயர் -2 தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். டயர் -2 தேர்வு கடந்த மாதம் 26-ந்தேதி நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வர்கள் தாங்கள் எழுதிய டயர்-2 விடைத்தாள் மற்றும் கேள்விக்கான அதிகாரபூர்வ விடைகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள இவற்றின் லிங்கை கிளிக் செய்து, பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வின்போது ஒவ்வொரு கேள்விக்கும் தாங்கள் எழுதிய விடைகள் இதில் சரிபார்த்து கொள்ளலாம். இதைத்தவிர தேர்வர்கள் எழுதிய தங்களது பதில் தாள்களை பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.

    இந்த வசதி நாளை (6-ந்தேதி) மாலை 6 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விடைத்தாள், கேள்விக்கான விடைகள் ஆகியவற்றை இணைய தளத்தில் பார்க்க முடியாது.

    • லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கோபிசெட்டிப்பாளை யத்தில் உள்ள ெசாத்தை அடகு வைத்து சீரகாபாடியில் ரூ.7 லட்சத்தில் லட்சுமிக்கு வீடு ஒன்றை வாங்கி கொடுத்தேன்.

    நான், சிறையில் இருக்கும்போது அவர், இன்னொரு வாலிபருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். இதனை என்னிடமே கூறினார். சம்பவத்தன்று நள்ளிரவு வெளியே போய் விட்டு லட்சுமி வந்தார். எங்கே போய் விட்டு வருகிறாய் என்று கேட்டபோது, தொடர்பு வைத்துள்ள வாலிபரை பார்த்து விட்டு வருவதாக தைரியமாக கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நான் வாங்கிக் கொடுத்த நிலத்தை கொடு என கேட்டபோது, லட்சுமி மறுத்து தப்பி ஓட முயன்றார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொன்றேன் என ரகு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

    பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை

    இந்த நிலையில் சரண் அடைந்த இவரது கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசார் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி, 2 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்களை அழைத்துச் சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு அம்லா அட்வின், இன்ஸ்ெபக்டர் அம்சவல்லி மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, வேறு கொள்ளை, கொலை உள்ளிட்ட ஏதாவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறீர்களா? என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அவர்கள் திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

      சேலம்:

      தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி முதல் இந்த மாதம் 2-ந்தேதி வரை கோமிங் ஆப்ரேசன் மேற்கொள்ள காவல் துறை தலைமையகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.

      இதில் சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 28 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

      இதில் 6,533 வாகன ஓட்டிகள் மீது சாலை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதையில் வாகனம் ஓட்டிய 377 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

      அத்துடன் மாவட்டத்தில் உள்ள 910 ரவுடிகளில் 741 பேரை வரவழைத்து அதிகாரிகள் எச்சரித்தனர். இதுபோல் சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் தலைமையில் மாநகரத்தில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

      • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
      • இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

      சேலம்:

      சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

      இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபடுவார்கள். இது தவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவி லில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருவதால் கோவிலில் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.

      தற்போது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந் தேதி இரவு பூச்சட்டுதல் விழா நடக்கிறது. இதையொட்டி இன்று காலை கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

      இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, விழா குழு உறுப்பினர்கள் சாந்தமூர்த்தி, ஜெய், ரமேஷ் பாபு, சுரேஷ்குமார், வினிதா மற்றும் ஏராளமான பக்தர் களும் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.

      தொடர்ந்து மாரியம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம் மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பும், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல் மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.

      15-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதேபோல சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

      • கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து.
      • இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

      எடப்பாடி:

      சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து. இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

      இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் 7 மூட்டை தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்று ரூ.108 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போது ஏலத்தில், முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7190 முதல் ரூ.8230 வரை விற்பனையானது.

      இரண்டாம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.5575 முதல் ரூ.6486 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்து 561 மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனையானது.

      • தமிழக ெதாடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
      • இதைத்தவிர போட்டித் தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது.

      சேலம்:

      தமிழக ெதாடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலு வலர்கள் நியமிக்கப்படு கின்றனர். ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

      இதைத்தவிர போட்டித் தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நியமனம் மூலம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளி யானது.

      கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக் கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களுக்கும் தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கிறது.

      இதற்காக விண்ணப்பிக்க இன்று (5-ந்தேதி) கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதனிடையே விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 12-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் துள்ளது.

      • ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர்.
      • சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

      சேலம்:

      சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி ஹசினா (37), இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

      சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ஹசினா குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டு சிறிது நேரத்தில் பிறகு வீட்டிற்கு வந்தார்.

      அப்போது சாதிக் துணியால் அவரது கழுத்தை நெறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஹசினா, சாதிக்கை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

      இதையடுத்து, தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சாதிக் அவரே கழுத்தை நெரித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கழுத்தை நெறித்து கொன்றார்களா? இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      மேலும் பிரேத பரிசோதனை முழு அறிக்கை வந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்ற விவரம் தெரியவரும்.

      • மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
      • அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

      தாரமங்கலம்:

      தாரமங்கலம் நகராட்சியில் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

      இதை சற்றும் எதிர்பார்க்காத நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி நனைத்தபடியால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தாரமங்கலம் நங்கவள்ளி மெயின் ரோட்டில் உருண்டு விழுந்து கதறி துடித்துள்ளார்.

      இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் சின்னுசாமி. செல்வமணி ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் ஆகியோரிடம் மகாலட்சுமிக்கு ஆதரவாக விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

      அப்போது அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுத பெண் ஊழியர் மகாலட்சுமி கூறியதாவது:- நகராட்சியில் பணிபுரியும் சக துப்புரவு ஊழியர் ஒருவர் தான் அதிகாரி போல் நடந்து கொண்டு என்னை ஒருமையில் திட்டி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடுவதும்,என்னை அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தியும் கொடுமை படுத்துகிறார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

      இதையடுத்து பெண் ஊழியரை மீட்டு தாரமங்கலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தரமாங்கலம் நகராட்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மகாலட்சுமி புகார் கூறிய சக துப்புரவு ஊழியரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
      • விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

      சேலம்:

      தமிழக தொடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

      இதைத்தவிர போட்டித்தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நியமனம் மூலம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

      கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களுக்கும் தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கிறது.

      இதற்காக விண்ணப்பிக்க இன்று (5-ந்தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 12-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

      • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது.
      • நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

      மேட்டூர்:

      காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து விநாடிக்கு 700 கன அடியாக நீடிக்கிறது.

      அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 163 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 188 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது.

      நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 86.77 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 85.97 கன அடியாக சரிந்துள்ளது.

      ×