என் மலர்
சேலம்
- தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் உழவர் சந்தைகளுக்கும் தக்காளி வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.
சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி இன்று காலை ரூ.95-105 முறை விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:
உருளைக் கிழங்கு - ரூ.30-60, சின்ன வெங்காயம் - ரூ.75-80, பெரிய வெங்காயம் - ரூ.25-28, பச்சை மிளகாய்- ரூ.80-85, கத்தரி -ரூ.40-44, வெண்டைக்காய்-ரூ.28-30, முருங்கைகாய்-ரூ.30-50, பீர்க்கங்காய் -ரூ.40,
சுரைக்காய்- ரூ.20-24, புடலங்காய்-ரூ.24-25, பாகற்காய்-ரூ.50-55, தேங்காய் - ரூ.20-25, முள்ளங்கி -ரூ.20-24, பீன்ஸ் - ரூ.98-105, அவரை- ரூ.70-75, கேரட் - ரூ.60- 74, மாங்காய்- ரூ.25-30, வாழைப்பழம்-ரூ.35-45-55,
கீரைகள் - ரூ.20-24, பப்பாளி - ரூ.20-24, கொய்யா-ரூ.40, சப்போட்டா - ரூ.35-40, ஆப்பிள் - ரூ.180-200, சாத்துக்குடி - ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மார்க்கெட்களில் ஒரு கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஏற்காட்டில் இருந்து நாகலூர் கிராமம் செல்லும் சாலையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.
- மரம் விழும் சமயத்தில் அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காட்டில் இருந்து நாகலூர் கிராமம் செல்லும் சாலையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. மரம் விழும் சமயத்தில் அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மரம் மின்சார கம்பிகள் மீது விழுந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார துறையினர், வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் பெரும் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சுமார் 1½ மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மாலை 4. 45 மணிக்கு சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப் படுத்தியதை தொடர்ந்து அந்த சாலையில் போக்கு வரத்து சரி செய்யப்பட்டது.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.
- சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
சேலம்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறு கிறது. இதில் ஏற்கனவே, சேலம் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண் கலப் பதக்கமும், அலங்கார வீச்சுப் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கையுந்து விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மாவட்ட அளவில் பள்ளி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் மாநில அள விலான போட்டியில் வெற்றிபெற்று ரொக்கப் பரிசு ரூ.6 லட்சம் பெற்றுள்ளனர்.
கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற அபிநயா, யாமினி, நிஷித்திரா, ரஞ் சினி, கனிஷ்கா, லாவண்யா ஸ்ரீ, செல்வி, மோனிகா, காயத்ரி, ஜுவிகா, கிருத்திகா, எம்.மோனிகா ஆகிய மாணவிகள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பாராட்டு தெரிவித்தார்.
அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கையுந்துப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல், கையுந்துப்பந்து சங்கத்தலை வர் ராஜ்குமார், சங்க தலைமை புரவலர் தமிழர சன் ஆகியோர் உடனிருந்த னர்.
- மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.
- புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணிகள்
இந்த நிலையில் தற்போது புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
1-வது யூனிட்
இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் விம்ஸ் மருத்துவமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
- இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.
சேலம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பி னர்களுக்கு விம்ஸ் மருத்து வமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று ராம கிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவல கத்தில் சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாமில் போக்கு வரத்து கழக பணியாளர் களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரி சோதனை, இ.சி.ஜி. மற்றும் இ.சி.ஓ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், சேலம் மண்டல பொது மேலாளர், துணை மேலா ளர்கள், கோட்ட மேலாளர், உதவி மேலாளர்கள், அனைத்துத்துறை பணியா ளர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.
முகாமை சேலம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன் முடி தொடங்கி வைத்தார். நாளை(வெள்ளிக்கிழமை) நாமக்கல் கிளை வளாகத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்தசிறப்பு மருத்துவ முகா மினை பயன்படுத்தி பணி யாளர்கள் தங்கள் உடல் நலனை காத்திடுமாறு நிர் வாக இயக்குநர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
- சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
- நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது.
சேலம்:
சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது. போலீசார், இவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வந்தனர்.
விசாரணையில் வேடு காத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23), திரு மலைகிரி பச்சா கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (19) ஆகியோர் இந்த துப்பாக்கி மற்றும் மோட் டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியதும், இவர்கள் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீ சார், இவர்களது கூட்டா ளியை தேடி வருகின்றனர்.
- சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் இவரது தம்பி ராஜகணபதி இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது.
- ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார்.
ேசலம்:
சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது தம்பி ராஜகணபதி (45). இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார். அதில் ராஜகணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
- சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
- 2021 -ம் ஆண்டு ஜூலை -2023 ஜூலை வரை உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்.டி. கட்டாயமில்லை என யு.ஜி.சி. அறிவித்தது.
சேலம்:
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
சேலம், நாமக்கல்
இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இைதத்தவிர அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், ஆசிரியர் கல்வியில் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் சேலத்தில் தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகமும் ெசயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர பிஎச்.டி. படிப்பு கட்டாயம் என கடந்த 2018-ல் மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அறிவித்தது. இதையடுத்து 2021-2022 கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை பயன்படுத்தி உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யும்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மாணவர்களால் பிஎச்.டி படிப்பை தொடர முடியவில்லை. இதனால் 2021 -ம் ஆண்டு ஜூலை -2023 ஜூலை வரை உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்.டி. கட்டாயமில்லை என யு.ஜி.சி. அறிவித்தது.
புதிய அறிவிப்பு
இந்த நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியில் சேர பிஎச்.டி. படிப்பு கட்டாயமில்லை. நெட், செட், ஸ்லெட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என யு.ஜி.சி. நேற்று அறிவித்துள்ளது.
- கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
- ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு ஊராட்சி, பாலிக்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில், ஒரு குறிப்பிட்ட நபர்களின் அடையாள அட்டையில் மட்டும் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீல் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் உதவி தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து அடையாள அட்டையில் சீல் வைக்கப்படாத பணியாளர்கள், தங்களுக்கும் ரூ.1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இன்று காலை மேட்டூர் - கொளத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
- நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து விநாடிக்கு 700 கன அடியாக நீடிக்கிறது.
அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 188 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 142 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 85.97 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 85.16 கன அடியாக சரிந்தது.
- பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
- மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிய அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- கவுரிசங்கர்(வயது 34). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகில் உள்ள மல்லிகுட்டை கிராமம் நெய்க்காரன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் கவுரிசங்கர்(வயது 34). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு கவுரிசங்கர் திரும்பினார்.
கருக்குபட்டி என்ற இடத்தில் வந்தபோது தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கவுரிசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.






