என் மலர்
சேலம்
- டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நெல்லை அணி 211 ரன்களை குவித்தது.
சேலம்:
7-வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
நேற்று இரவு நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்துள்ளது.
அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த அஜிதேஷ் குருசாமி, நிதிஷ் ராஜகோபால் ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஜிதேஷ் குருசாமி 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ் ஜோடி 78 ரன்கள் சேர்த்த நிலையில் சோனு யாதவ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராஜகோபால் 76 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரித்தீஸ்வரன் 10 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார்.
- ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் தனது நண்பரை பார்க்க, நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்தார். கேன்டீன் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்ற அவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, அவரது வண்டியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எனது வண்டியே மிகவும் பழையது. அதையும் திருடிச்சென்று விட்டார்களா? என்ற வேதனையுடன் வண்டியை தேடினார். சாவி தன்னிடம் இருப்பதால், யாராவது தள்ளிக்கொண்டு தான் சென்றிருக்க வேண்டும் என முடிவு செய்த அவர், நீண்ட தூரம் வண்டியை தள்ளிச் சென்றிருக்க முடியாது என கருதி, தனது நண்பருடன் வண்டியை தேடத் தொடங்கினார்.
அப்போது, கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த வண்டியை கொண்டு வந்து ரிப்பேர் பார்க்க சொன்னது யார்? என கேட்டார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நபரை கடை உரிமையாளர் கைகாட்டினார்.
இதற்கிடையில், அந்த நபர் பட்டறையின் எதிர்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து, எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து, திருடி வந்த வண்டிக்கு சிறிய பூஜையும் போட்டிருந்தார். இதுகுறித்து வேலு விசாரித்த போது, அவர் மன்னார்பாளையத்தை சேர்ந்த ராஜா (49) என்றும், அது தன்னுடைய வண்டி எனக் கூறினார்.
இதனையடுத்து, அவரை நண்பர் உதவியுடன் மடக்கிப் பிடித்த வேலு, டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவர், 'என்னை திருடன்னு சொல்லாதீர்கள். எனது நண்பன் தான் வண்டியை கொடுத்தான்.
எனது செல்போனும் அவனிடம் தான் இருக்கிறது. எனது 2 பிள்ளைகள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் திருடல, என்னை திருடன் என சொல்லாதீர்கள்,' என்றார்.
இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, என்னை திருடன்னு சொல்லாதீர்கள் என்று அவர் கூறும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
- அவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
சேலம்:
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவர் சையத் மொய்னுதீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களுக்கு இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மாநில தலைவர் கதிரேசன் நிருபர்களிடம் கூறுகையில், பிற துறைகளைப் போன்று ஓய்வு பெறும் நாளில் போக்குவரத்து துறையினருக்கும் பணபலன்கள் வழங்க வேண்டும்.
கடந்த 8 மாதங்களில் 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க வேண்டும் என்றார்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓலூர் வட்டார கிராமங்களை குறி வைத்து லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓமலூர் நகர், புளியம்பட்டி, கோட்ட மேட்டுப்பட்டி, பல்பாக்கி, இந்திராநகர், பச்சனம்பட்டி, திமிரிகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர், 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.
அதே போல சட்ட விரோதமாக சந்துகடைகள் வைத்து மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சந்துகடைகள் ஒவ்வொரு கிராமத்திலும் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யபடு கிறது. குறிப்பாக காமலாபுரம் கிராமத்தில் தான் அதிகள வில் சந்துகடைகள் வைத்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டிலை திறந்து கலப்படம் செய்தும் மது விற்பதாக புகார்கள் கூறப்படுகிறது. அதனால், சந்துகடை வைத்து மது விற்பனை செய்யும் அனை வரும் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவக்குமார் உத்தர விட்டார்.
இதனை தொடர்ந்து ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்கும ரன் மற்றும் போலீசார் அனைத்து பகுதிகளிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரே நாளில் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் நேரடியாக விற்பனை செய்யாமல், செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதே போல சந்து கடை மூலம் மது விற்பனை செய்த பெண் உட்பட 6 பேரை போலீசார் அதிரடி யாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
தொடர்ந்து ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 11 பேரி டமும் லாட்டரி விற்பனை செய்யக்கூடாது என்றும் சட்டவிரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று ஆலோசனை மற்றும் விழிப் புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இதே வேலையை செய்து வந்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.
- சேலத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஏ.டி.ஜி.பி அருண் திடீர் ஆலோசனை நடத்தினார்.
- போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.
சேலம்:
கோவையில் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று காலை கோவை மாநகர மற்றும் சரகத்தில் உள்ள காவல் அதிகாரிகளுடன் தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி (சட்டம் ஒழுங்கு) அருண் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, இன்று மதியம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, மற்றும் கவுதம் கோயல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சேலம் சிவகுமார், நாமக்கல் ராஜேஷ் கண்ணா, தர்மபுரி ஸ்டீபன் ஜேசுபாதம், கிருஷ்ணகிரி சரத்குமார் தாகூர் ஆகியோருடன் ஏ.டி.ஜி.பி அருண் ஆலோசனை நடத்தினார்.
கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போல் இனி நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் ஆலோசனை வழங்கி வழங்கினார்.
இதேபோல் உயர் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து தரப்பினரையும் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
- கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும் இருந்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள கருப் பணம்பட்டி கிராமத்தில் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சா லையில், ஆர்டரின் பேரில் மின் சாதன பொருட்கள் தயார் செய்து கொடுக்கப்படு கிறது. இந்த தொழிற்சா லையை சேலத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தொழிற்சாலையை ஒட்டியே மின் சாதன பொருட்களை சில்லரையாக விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார். ஓமலூரில் இருந்து மேச்சேரி செல்லும் சாலையில் கருப்பணம்பட்டி மேட்டில் இந்த கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு கடைய மூடிவிட்டு சென்ற கடை ஊழியர்கள் காலையில் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், சி.சி.டிவி கேமராக்கள் உடைக்கப் பட்டும் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர் கள் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைத்தி ருந்த பணம் 12 ஆயிரம் ரூபாய், கடையில் இருந்த காப்பர் மின் சாதன பொருட்கள், சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் ஆகிவை கொள்ளை போயிருந்தன.
இது தொடர்பாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசா ரும், ஓமலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக் கப்பட்டு கை ரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக் பட்டது. இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு சாமியார் தோட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
- பால் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்க ளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு சாமியார் தோட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில் கறவைமாடுகள், இறைச்சி ஆடுகள், மீன் மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள், பசுந்தீவனம் மற்றும் விதைகள் உற்பத்தி, பால் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்க ளும் ஒருங்கிணைக்கப்
பட்டுள்ளது.
இந்த கூட்டுப்பண்ணை முறையில் கிடைக்கும் கூடுதல் வருவாய், தீவனம் மற்றும் கழிவு மேலாண்மை, எளிய முறை சந்தைப்படு த்துதல், எந்திரங்கள் மற்றும் தொழிலாளர் மேலாண்மை குறித்து, சேலம், புதுக்கோட்டை மற்றும் ராம நாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உயரதிகாரிகள் குழுவி னர், நேரில் பார்வையிட்டு கலந்தாய்வு செய்தனர். கூட்டுப்பண்ணை முன்னோடி விவசாயி ஞான சேகரன் மற்றும் ஏத்தாப்பூர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவன தலைவர் ஜெயரா மன் ஆகியோரிடம், கூட்டுப் பண்ணையை நிர்வாக உத்திகள் குறித்து கேட்ட றிந்தனர்.
இதுகுறித்து சிங்கிபுரம் ஞானசேகரன் கூறுகையில், 'பல்வேறு பண்ணைகள், பல முன்னணி நிறுவனங்க ளின் வேளாண் அபிவிருத்தி கருவிகளை பார்வையிட்ட பிறகு, சிங்கிபுரத்தில் 5 ஏக்கர் தோட்டத்தில் ஒருங்கி ணைந்த கூட்டுப்பண்ணை அமைத்துள்ளேன். இதனால் செலவு குறைந்து கூடுதல் வருவாய்க்கு வழிவகை கிடைத்துள்ளது. மற்ற விவ சாயிகளும் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை அமைக்க நிதியுதவியும் கூடுதல் வரு வாய் பெறுவதற்கு ஆலோ சனை வழங்க தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன் வர வேண்டும் என்றார்.
- சேலம் மாநகர ஆயுதப் படை போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
- மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
சேலம்:
சேலம் மாநகர ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சின்னண்ணன் (வயது 40). இவர் லைன்மேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்தவர் மதியம் 12.45 மணி அளவில் ஆயுதப்படை மைதானத்தில் சக காவலர்களுடன் பணியில் இருந்தார். அப்போது சின்னண்ணன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதைக் கண்ட சக காவலர்கள் உடனடியாக சின்னண்ணனை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சின்னண்ணன் மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து போன சின்னண்ணனுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் போலீஸ் மரியாதையுடன் இன்று சின்னண்ணன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. சின்னண்ணனுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
- புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கூத்தாண்டவர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
- நேற்று திருநங்கைகள் கூத்தாண்டவர் சுவாமி முன்னிலையில் திருநங்கை கள் திருமண நிகழ்ச்சி நடந்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கூத்தாண்டவர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் கூத்தாண்டவர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.
நேற்று திருநங்கைகள் கூத்தாண்டவர் சுவாமி முன்னிலையில் திருநங்கை கள் திருமண நிகழ்ச்சி நடந்தது. பூசாரி தாலி எடுத்து கொடுக்க திருநங்கை கள் அதை கழுத்தில் கட்டிக் கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருநங்கைகள் கையால் ஆசி பெற்று திரு நீரு பெற்றுச் சென்றனர். அதன் பிறகு மானாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கை ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- ரேசன் கடை ஊழியர் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார்.
- அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
சேலம்:
சேலம் முகமது புறா ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாஜில் பிகர் அலி (வயது 65). ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவர் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. நேற்று இரவு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்து அந்த பகுதியினர் சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விஷம் குடித்த நிலையில் அவர் இறந்து கிடந்தார்.
மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது .
அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு, பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் கோட்டம் சார்பில் சுபமுகூர்த்தத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 10-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம்:
சேலம் கோட்டம் சார்பில் சுபமுகூர்த்தத்தையொட்டி பல்வேறு வழித்தடங்களில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 10-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் புறநகர் பெங்க ளூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திரு வண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து தடம் நீட்டிப்பு வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படுகின்றன.
இது தவிர பயணியர் வசதிக்கு அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம் வழியாகவும் முன்பதிவு நடக்கிறது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரி சலை தவிர்க்கலாம் என்று அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டபெரியாம்பட்டி கிராமத்தில் உள்ள நச்சுவா யனூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு உள்ளது. இதில், தற்போது 50-க்கும் மேற் பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கிராம பொது நிலம் உள்ளது. இங்கு அம்மன் கோவிலும் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியை சுற்றிலும் கடந்த ஆறு மாதமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், கிராமத்தில் பெய்யும் மழைநீரும் கசிவுநீரும் வந்து இங்கே தொடர்ந்து தேங்கி நிற்கிறது.
அங்கு மரங்கள் இருப்ப தால், மரத்தில் இருந்து உதிரும் இலைகள் தண்ணீ ரில் அழுகி அந்த பகுதி துர் நாற்றம் வீசுகிறது. மேலும், ஈக்கள் கொசுக்கள் தொல் லையும் அதிகரித்து காணப் படுகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல கிராமத்தின் பொது காரியங்கள், திரு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இந்த இடத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மருத்துவ முகாம் கள், கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற முடி யாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் கிராம மக்களும் அவதிப்படுகின்றனர்.
மேலும், அங்குள்ள வாக்குச்சாவடி மைய பழைய கட்டிடம் மிகவும் பாதிப்ப டைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், சுவர்களும், ஓடுகளும் உடைந்து விழுந்து வருகிறது.அதனால், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், தண்ணீர் செல்லும் கால் வாய்களின் ஆக்கிரமிப்பு களை அகற்றி குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






