காடையாம்பட்டி அருகே கியாஸ் கசிந்து வீடு தீப்பிடித்தது

பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார். நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.
சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அருகே பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் (வயது 45). தொழி லாளி. இவர் வீட்டில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்.

நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதனால் கியாஸ் கசிவு சமயல் அறை முழுவதும் பரவி தீப்பிடித்தது.

இதனை கண்ட ரவிகுமார் குடும்பத்தினர் உடனடியாக காடையாம்பட்டி தீய ணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். காடை யாம்பட்டி நிலைய அலுவ லர் ராஜசேகரன் தலைமை யில் தீயணைப்புத் துறையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இத னால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com