என் மலர்
சேலம்
- தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
- ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
குறிப்பாக சங்ககிரி, தம்மம்பட்டி, மேட்டூர், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையயை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 25.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம் மாநகர் 10.4, ஏற்காடு 9.8, வாழப்பாடி 2.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 15, கெங்கவல்லி 11, தம்மம்பட்டி 18, கரியகோவில் 1, வீரகனூர் 12, எடப்பாடி 4, மேட்டூர் 14.6, ஓமலூர் 1.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மங்களபுரம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
எருமப்பட்டி-3, குமாரபாளையம்-9.20, மங்களபுரம்-23.60, நாமக்கல்-8, புதுச்சத்திரம்-17.30, ராசிபுரம்-10, சேந்தமங்கலம்-4, திருச்செங்கோடு-4, கொல்லிலை செம்மேடு-15, கலெக்டர் அலுவலகம்-2.50 என மாவட்டம் முழுவதும் 96.60 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- சேலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
- முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு 'வேல்' பரிசளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி..." என்று தெரிவித்தார்.
- கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
- தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் 5 ஆயிரம், 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு நேற்று 16 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 469 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று 113.69 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 84.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16,361 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சேலம் 160 ரன்கள் எடுத்தது.
சேலம்:
டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பர்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிஷேக் 47 ரன்னும், ஹரி நிஷாந்த் 31 ரன்னும், சன்னி சாந்து 30 ரன்னும் எடுத்தனர். விஜய சங்கர் 2 ரன்னில் அவுட்டானார்.
சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆஷிக் 36 பந்தில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோகித் ஹரிஹரன் 32 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சேப்பாக் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சேப்பாக் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
- 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
* என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
* நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன்.
* இ.பி.எஸ். ஒரு மாதத்திற்கு முன்பாக வன்னியர் இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
* கடைசி நேரத்தில் இடஒதுக்கீடு கொடுத்ததால் அது நடைமுறைக்கு வரவில்லை.
* 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
- காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று காலையில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனால் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்து, டி.நரசிப்புராவில் உள்ள திருமகூடலு வழியாக ஒகேனக்கல் வந்து சேரும். அந்த வகையில் நேற்று கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 48 மணி நேரத்தில் தமிழகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளை மதியத்துக்கு மேல் கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் நாளை இரவு முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.81 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 6829 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் பாசனத்திற்கு தொடர்ந்து 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
- ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.
சேலம்:
ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .
அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.
பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதியில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
அதே போல் கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடியாகவும், 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தியும் தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சேலம்:
டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வசீம் அகமது 32 ரன்னில் அவுட்டானார். ஜகதீஷ் கவுசிக் 5 ரன்னில் வெளியேறினார். சுஜய் சிவசங்கரன் 25 ரன்னும், ஜாபர் ஜமால் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சய் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார். 17வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ராஜ்குமார் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
- வேம்படிதாளம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
சேலம்:
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (18-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இளம்பிள்ளை, சித்தர் கோவில், இடங்கணசாலை,
கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, ெபாதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பக்குட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தது.
சேலம்:
டிஎன்பிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் அரை சதம் அடித்து 50 ரன்னில் அவுட்டானார். முகமது 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
நெல்லை சச்சின் ராதி 5 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஜிதேஷ் குருசாமி 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ்குமார் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து73 ரன்னில் அவுட்டானார்.
2-வது விக்கெட்டுக்கு சந்தோஷ்குமார்-நிர்மல் குமார் ஜோடி பொறுப்புடன் ஆடி 54 ரன்கள் சேர்த்தது. நிர்மல் குமார் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், நெல்லை அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. நெல்லை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.






