என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,220 கன அடியாக அதிகரிப்பு
- நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16,361 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story






