என் மலர்tooltip icon

    சேலம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேலம் மாவட்டத்தில் 80 தியேட்டர்களில் இத்திரைபடம் இன்று வெளியானது.
    • சேலம் மாநகரத்தில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியானது. இதையொட்டி காலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர்.

    சேலம்:

    நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியானது. சேலம் மாவட்டத்தில் 80 தியேட்டர்களில் இத்திரைபடம் இன்று வெளியானது.

    சேலம் மாநகரத்தில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியானது. இதையொட்டி காலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர்.

    பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    அவர்கள் தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சேலம் 5 தியேட்டர் முன்பு படம் வெளியாவதையொட்டி விஜய் மக்கம் இயக்கம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

    அனைத்து தியேட்டர்களிலும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது. முதல் காட்சி தொடங்கியதும் தியேட்டரில் காத்திருந்த ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தியேட்டருக்குள் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது. விஜய் வரும் ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜய் படம் வெளியான மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆங்காங்கே தங்களது மகிழ்ச்சியை பகிரும் வகையில் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.

    நாமக்கல்

    நாமக்கல் நகரில் 6 தியேட்டர்களில் லியோ படம் திரையிடப்பட்டது. படத்தை காண ஏராளமான இளைஞர்களும், அவர்களுடன் பெண்களும் தியேட்டரில் குவிந்தனர். முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்டது.

    12 மணிக்கு காட்சிக்கு டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்களும் காலையிலேயே குவிந்ததால் தியேட்டர்களில் திருவிழா போல் காட்சியளித்தது. அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.சேலம், நாமக்கல்லில்

    லியோ படம் 80 தியேட்டர்களில் ரிலீஸ் 

    • ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
    • தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    நாமக்கல்:

    கர்நாடக அரசை கண்டித்து வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) சேலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து நாமக்கல்லில் அதன் மாநில தலைவர் வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் டெல்டா பகுதிகள் நீரின்றி பாலைவனமாகும் சூழல் உருவாகியுள்ளது. உரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் ஜங்ஷன் வழியாக கர்நாடகத்திற்கு செல்லும் ரெயில்களை மறித்து வருகிற சனிக்கிழமை காலை 11 மணியளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இதில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திரளாக பங்கேற்க உள்ளனர். டெல்டா பாசன விவசாயிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாழப்பாடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களை படைப்புழுக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    • மக்காச்சோள இலையின் பச்சையத்தை படைப்புழுக்கள் சுரண்டி உண்பதால் இலை வெளிர்த்து விடுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களை படைப்புழுக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. மக்காச்சோள இலையின் பச்சையத்தை படைப்புழுக்கள் சுரண்டி உண்பதால் இலை வெளிர்த்து விடுகிறது. இந்த புழுக்கள் இளம்செடியின் இலையுறை மற்றும் முதிர்ந்த செடியின் கதிர் நுாலிழைகளையும் இரவு நேரத்தில் அதிகமாக சேதப்படுத்துகின்றன.

    கோரிக்கை

    புழுக்கள் இலையுறைனுள் சென்று பாதிப்பை உண்டாக்கி இலைகள் விரிவடையும் போது அதில் வரிசையாக துளைகளை ஏற்படுத்துவதால் மக்காச்சோளம் மகசூல் பாதிக்கும் என்பதோடு தரமும் குறையும் என்பதால் மக்காச்சோளத்தை தாக்கி அளிக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனையும், படைப்புழுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்கவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்தது.

    ஆய்வு

    இதனையடுத்து ஏத்தாப்பூர் மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சரவணன், வேளாண்மை அலுவலர் கலாசித்ரா, உதவி வேளாண்மை அலுவலர் வான்மதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் திலகவதி, பயிர் அறுவடை ஒருங்கிணைப்பாளர் சுதா, ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் ஆகியோர் துக்கியாம் பாளையம், மேலூர், பறவைக்குட்டை பகுதிகளில் மக்காசோளம் வயல்களில் படைப்புழுக்கள் தாக்குதல் குறித்து ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுமென இக்குழுவினர் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.

    • அரசு மருத்துவ மனையில் தினமும் வெளி நோயாளியாக 600-க்கு மேற்பட்டவர்களும், உள் நோயாளியாக 60 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • 12 டாக்டர்கள் மற்றும் 16 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி அரசு மருத்துவ மனையில் தினமும் வெளி நோயாளியாக 600-க்கு மேற்பட்டவர்களும், உள் நோயாளியாக 60 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இங்கு, பாய்சன் ( விஷம்) பிரிவு, மாரடைப்பு, சாலைவிபத்து, பக்கவாதம், தீக்காயம், குழந்தைகள் அவசர பிரிவு, கலப்பு தீவிர சிகிச்சை, ஆப்ரேசன் தியேட்டர் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தலைமை மருத்துவ அலுவலர் உட்பட 12 டாக்டர்கள் மற்றும் 16 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அதிநவீன மானிட்டர் வசதியுடன் கூடிய ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.பானுமதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி டயாலிசிஸ் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதுகுறித்து சங்ககிரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.சரவணகுமார் கூறுகையில்,

    சங்ககிரி அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சம் மதிப்பில் அதிநவீன மானிட்டருடன் கூடிய 2 எந்திரங்கள் கொண்ட டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு இணை இயக்குனரால் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி வசதியுடன் சிகிச்சை பெறும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரிவில் மாதம் 12 நோயாளிகளுக்கு இலவசமாக அரசு காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெரும் வகையில் வசதி உள்ளது. மேலும், இந்த பிரிவில் நோயாளிகள் அதிகமாக வரும் பட்சத்தில் கூடுதலாக ஒரு டயாலிசிஸ் எந்திரம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதற்கு தேவையான இடவசதிகளும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நோயாளிகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை குடிமை மருத்துவர் டாக்டர். திருமாவளவன், டயாலிசிஸ் சிறப்பு மருத்துவர் முருகவேல், டாக்டர்கள் சிலம்பரசி, ராணி, வனிதா, சங்கர் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 17-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    • அணையில் இருந்து குடிநீருக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    மேலும் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த 17-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று அது 6 ஆயிரத்து 846 கனஅடியாக குறைந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.62 அடியை எட்டி இருந்தது. அதேபோல் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 218 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1691 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 75.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1055 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1991 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
    • புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.4.67 கோடி செலவில் நடைபெற்ற திருப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பூக்களை தூவி சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி மாரியம்ம னுக்கு இன்று காலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடிமர பிரதிஷ்டை விழாவில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள் ஜெய், ரமேஷ் பாபு, வினிதா, சுரேஷ்குமார், இந்து அறநிலை டி.சத்யா என்ற குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது.

    • கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் . இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.

    சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.

    இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
    • நிலக்கடலைக்கான பொது ஏலத்தில் ரூ.78 ஆயிரத்து 398 மதிப்பிலான நிலக்கடலை விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் நிலக்கடலை குறைந்தபட்சமாக ரூ.2,728 முதல் அதிகபட்சமாக ரூ.4,415 வரை விற்பனையானது

    எடப்பாடி:

    சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில், கொங்கணா புரத்தை அடுத்த கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும், தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று இம்மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 145 மூட்டை தேங்காய் கொப்பரைகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் ரக தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.7,880 முதல் 8,255 வரை விலைபோனது. இதேபோல் இரண்டாம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,085 முதல் ரூ.7,381 வரை விலைபோனது, ஏலத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.

    தொடர்ந்து நடைபெற்ற நிலக்கடலைக்கான பொது ஏலத்தில் ரூ.78 ஆயிரத்து 398 மதிப்பிலான நிலக்கடலை விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் நிலக்கடலை குறைந்தபட்சமாக ரூ.2,728 முதல் அதிகபட்சமாக ரூ.4,415 வரை விற்பனையானது. தற்போது இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தொடங்கி உள்ளதால், வரும் நாட்களில் இம்மையத்தில் நிலக்கடலை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
    • ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

    இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.

    தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.6, கரியகோவில் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 15, பரமத்திவேலூர் 15, கலெக்டர் அலுவலக பகுதி 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்தது. மேலும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் வழங்காததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது.

    ஆனாலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த 10-ந் தேதி 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 846 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 14.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    இதே போல் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 566 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 1992 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 75.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1432 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 ஆயிரத்து 292 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பொத்தாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் (30), பட்டதாரி. இவரது உறவினர் முருங்கப்பட்டி பாறைக்காட்டை சேர்ந்தவர் கணேசன் (45), இவரது மனைவி அமுதவள்ளி (36), இவர் பொத்தாம்பட்டியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கோவிந்தராஜிடம், வருவாய் துறையில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது, அப்பதவியை பெற தலா 5 லட்சம் வீதம் 7 பேருக்கு 35 லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனே பணியை வாங்கி தருகிறேன் என கணேசன் மற்றும் அவரது மனைவி அமுதவல்லி ஆகியோர் கூறினர்.

    இதை உண்மை என நம்பிய கோவிந்தராஜ் 5 லட்ச ரூபாய் கொடுத்தார். அதனை பெற்ற தம்பதியினர் 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கியது போல் போலி நியமன உத்தரவு, வருவாய் துறை அடையாள அட்டையை வழங்கினர்.

    இதை பெற்ற கோவிந்தராஜ் ஜூலை 20-ந்தேதி நாமக்கல் தாலுகா அலுலகத்திற்கு சென்ற போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணேசன், அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கோவிந்த ராஜ் சேலம் மாநகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறவைாக உள்ள கணேசனை தேடி வருகிறார்கள்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×