என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தற்கொலை
    X

    தொழிலாளி தற்கொலை

    • சேலம் குகை நல்லாயி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
    • உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் பார்த்தும் குணமாக வில்லை.

    சேலம்:

    சேலம் குகை நல்லாயி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் சலூன் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் பார்த்தும் குணமாக வில்லை. இதனால் மனம் உடைந்த வெங்கடேசன்நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×