search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 12 நாட்கள் புத்தக திருவிழா
    X

    சேலத்தில் 12 நாட்கள் புத்தக திருவிழா

    • அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

    சேலம்:

    சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதல்- அமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதகரிகத்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்றும் இந்த ஆண்டும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தக திருவிழா வருகின்ற 22.11.2023 (புதன்கிழமை) தொடங்கி 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) வரை 12 நாட்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.

    இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சி கள் நடத்திடவும், மாணவர்க ளுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளர்களின் படைப்பு களைக் கொண்ட விற்பனை யகங்கள் அமைத்திட வும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×