என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறினார். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு முடிந்ததும் மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களையும், நடந்து வரும் மீட்பு ப ணிகள் பற்றிய விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக எடுத்து கூறி உள்ளது. நாங்களும் புயலால் சேதம் அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு உள்ளோம்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை இப்போது உடனடியாக கூற முடியாது. இன்னும் சில இடங்களை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. எல்லா இடத்திலும் ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் மொத்த சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வோம் என்றார்.

    புதுக்கோட்டை வடகாடு வடக்கிப்பட்டியில் ஆய்வு செய்ய சென்ற மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு அங்குள்ள தோட்டத்தில் தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்ததை பார்த்து அதனை பார்வையிட தோட்டத்திற்குள் நடந்து சென்றார்.

    அப்போது போதிய வெளிச்சம் இல்லை. இதனால் சற்றுமேடான பகுதியில் ஏற முயன்றபோது திடீரென அவர் கால் இடறி கீழே விழப்பார்த்தார். உடன் சென்ற அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டனர். #GajaCyclone #CentralCommittee

    மத்திய குழு வருகையால் 9 நாட்களுக்கு பிறகு வடகாடு பகுதி மக்கள் மின் விளக்கு வெளிச்சத்தை கண்டனர். அப்போது அவர்கள் பகலில் வந்து ஆய்வு நடத்தும்படி கண்ணீர் மல்க வேண்டினர். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகாடும் ஒன்று. மின் கம்பங்கள், மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இந்த பகுதி மக்கள் கடந்த 9 நாட்களாக இருளில் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு மத்திய குழுவினர் வடகாடு பரமன் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தனர். புயலால் சரிந்து இருளில் விழுந்து கிடந்த மரங்களை அவர்கள் பார்வையிடும் விதமாக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மின் விளக்குகள் எரிந்தன.

    இதனால் 9 நாட்களுக்கு பிறகு அப்பகுதி மக்கள் வெளிச்சத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    மத்திய குழுவினர் அங்கு புயலால் சேதம் அடைந்த மரங்கள், வீடுகளை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் மத்திய குழுவினரிடம், “எங்கள் வீடு, தென்னை மரங்கள் என்று எல்லாவற்றையும் இழந்து விட்டோம். எங்கள் வாழ்வாதாரமே அழிந்து போய் விட்டது. நீங்கள் தான் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஒரு வாரமாக ரோட்டில்தான் நிற்கிறோம். நீங்கள் வந்ததால்தான் எங்களுக்கு வெளிச்சமே வந்துள்ளது. எங்களுக்கு தண்ணீர் மட்டும்தான் தருகிறார்கள். ஆய்வு பணியை செய்ய பகலில் வாருங்கள்” என கண்ணீர் மல்க வேண்டினர்.

    பெண்களில் பலர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கைகளை மத்திய குழுவினர் கருணையுடன் கேட்டு விட்டு அடுத்த இடத்தை பார்வையிட கிளம்பினர். குழு செல்லும் வழி நெடுக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    வீடு வாசல், தோட்டம், துரவுகளை இழந்து தவிக்கும் வேதனையில் யாராவது ஆவேசப்பட்டு அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அதை தடுப்பதற்காக சாலை ஓரங்களில் கயிறு கட்டி பொதுமக்களை அதனை தாண்ட விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மத்திய குழுவினரிடம் நேரில் தங்களது ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் போனது. #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு இன்று மாலை பார்வையிட்டது. #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்கள் ஆகியும் மீளாத்துயரில் தவித்து வரும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவியை கோரினார்.



    இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை சென்றனர்.

    புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது. 

    அப்போது துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர். சி.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றி ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் புதிய மின்கம்பங்களை நடும் பணிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பணிகளில் எந்தவித தொய்வுமின்றி மிகவும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தை பார்வையிட்ட அமைச்சர்கள், மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    அப்போது அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள் தொடர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    துணை முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், அடப்பங்கரை சத்திரம், கந்தவர்வக்கோட்டை, பந்தக்கோட்டை, மருதன்கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

    தற்போதுகூட கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை பிரதான சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் கேரள மாநிலத்தில் இருந்து மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் மோசஸ்ராஜ்குமார் தலைமையில் 26 பேர் அடங்கிய குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோன்று மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்கம்பங்கள் சீர்செய்து மின் விநியோகம் வழங்கும் பணியும், சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், பாதிக்கப்பட்ட பயிர்கள், வீடுகள் குறித்த சேத மதிப்பீடுகளை கணக்கெடுக்கும் பணியும், குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியும், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்பகுதிகளில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பெரும்பான்மையான பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ‌ஷம்பு கல்லோலிகர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். #GajaCyclone
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை இன்று மாலை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு பார்வையிட உள்ளது. #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    கடந்த 16-ந்தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    கடந்த 10 நாட்கள் ஆகியும் மீளாத்துயரில் தவித்து வரும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    இந்தநிலையில் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவியை கோரினார்.

    இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    பள்ளத்திவிடுத்தியில் கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்த வீட்டின் முன்பு சோகத்துடன் நிற்கும் தம்பதி.

    புதுக்கோட்டையில் இன்று மாலை 4 மணியளவில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு பார்வையிட உள்ளது. இதற்காக அந்த குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை செல்கிறார்கள்.

    இந்த குழுவில் உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கபூல், மத்திய எரிசக்தி முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் மாணிக் சந்திரா, சாலை மற்றும் போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர். இளவரசன் உள்ளிட்ட குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

    முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் கந்தர்வகோட்டை பகுதியில் அருந்ததியர் காலனி, சோழகம்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியம்பட்டி, நெற்புகை, வீரடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களை பார்வையிடுகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மீட்பு குழு அதிகாரி சுனில் பாலிவால், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சம்பு கலோ லிகர், கலெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குழுவினருடன் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பால கிருஷ்ணரெட்டி, கே.சி.கருப்பணன், பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுமையாக சென்றடையாததால் பொதுமக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்கள் தயங்குவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி சேதமடைந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    சோழகன்பட்டியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ள மக்களை அமைச்சர்கள் யாரும் இதுவரை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் 24 மணி நேரமும் அதிகாரிகளையும் பணியாற்ற விடவில்லை. நிவாரண பணிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. எனவே தான் பொதுமக்களை நேரடியாக சந்திப்பதற்கு அமைச்சர்கள் தயங்குகின்றனர்.

    இதனால்தான் காரிலேயே அவர்கள் வலம் வருகின்றனர். இத்தனைக்கும் இடையே பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் திண்டாடி வருகின்றனர். இதனை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு உடனடியாக தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து உடனடியாக முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    கஜா புயலால் நான்கு மாவட்டங்களில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். முகாம்களிலும், பள்ளிகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    இயல்பு நிலை திரும்பிவிட்டது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும்.


    புயலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு உடனடியாக கணக்கிட்டு வழங்க வேண்டும். தற்போதுதான் கிராமங்களில் வி.ஏ.ஓ.க்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. உங்களது பணிகளை உடனடியாக முடித்து, இழப்பீடு தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #GajaCyclone #TNMinisters
    கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புயல் நிவாரண பணிகளை பார்வையிட சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone #OPanneeerSelvam
    கந்தர்வக்கோட்டை:

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாகியும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கந்தர்வக்கோட்டை பகுதியிலும் புயல் சேத பாதிப்புகளை பார்வையிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையறிந்த பொது மக்கள், அவரிடம் முறையிடுவதற்காக தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் நாங்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்வோம். அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் வருகிறார்.

    எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். இருப்பினும் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தாமலை எம்.எல்.ஏ. ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்ட நிலையில், அங்கிருந்து கலைந்து செல்லாமல் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் அங்கு ஓ.பன்னீர்செல்வம் வரவே, அவரது காரை பொதுமக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம், குடிநீர், மின்சாரம் இல்லாதது குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். மேலும் எங்கள் பகுதியில் சேதமான பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.


    பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர், மின்சாரம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்றார். இதையடுத்து அவர் மற்ற பகுதிகளை பார்வையிட சென்றார்.

    முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #OPanneeerSelvam
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்து தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #GajaCyclone #OPS
    புதுக்கோட்டை:

    கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலானது தலைமுறை காணாத அளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. இயற்கை இடர்பாடு காலங்களில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மனச்சாட்சிப்படி பணியாற்றுவதை சகித்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசியல் செய்கிறது.

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும். பசுமை வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது வேறு. கஜா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது வேறு. இது போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


    பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு நிதி அளிக்கும் முன்னரே தமிழக அரசு வேண்டிய நிதியை அளித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார்.  #GajaCyclone #OPS
    கஜா புயலின் கோர தாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. #gajacyclone #heavyrain
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் உள்பட பல கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தையே நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தென்னை, மா, பலா உள்ளிட்டவற்றை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தனர். கஜா புயலின் கோர தாண்டவத்தால் தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பிள்ளை போல் வளர்த்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வீழ்ந்து கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். 

    மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமங்கள் திக்குமுக்காடி வருகிறது. இரவில் ஊரே இருளில் மூழ்கி கிடக்கிறது. தாகத்தை தணிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்கள் ஊர் பொதுமக்களின் அவல நிலையை அறிந்து கதறித்துடித்த வெளியூரில் வசிக்கும் இளைஞர்கள் உடனே ஓடோடி வந்து உதவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 4 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை அனைவரும் கையுடன் எடுத்து வந்தனர். லாரிகள் உள்ளிட்ட வாகனங் களிலும் கொண்டு வந்து குவித்தனர். அந்த பொருட்களை கொண்டு ஊர் மக்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கொண்டு வந்த பொருட்கள் அனைத்து காலியானது. நேற்றுடன் அனைத்து உணவு பொருட்களும் தீர்ந்து விட்டது. சமைப்பதற்கு தேவையான பொருட்கள் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். 

    மின்சாரம் இல்லாததால் சமைக்க கூட முடியவில்லை. உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறார்கள். காலை-பகல் நேரங்களில் பொழுதை போக்கி விடுகிறார்கள். இரவு ஆகிவிட்டால் ஊரே கும்மிருட்டாகி விடுகிறது. எதிரில் வரும் நபரை கூட கண்டு பிடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு இருள் சூழ்ந்து கிடக்கிறது. கிராமங்களில் செடிகள் அதிகம் உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகம் உண்டு. இதனால் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். #gajacyclone #heavyrain
    அன்னவாசல் பகுதியில் கஜா புயலால் 5-வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    அன்னவாசல்:

    கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள், பொது வழிபாட்டு தலங்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. புயலுக்கு தப்பிக்க முடியாமல் வீடுகளில் உள்ள மேற் கூரைகள் சேதம் அடைந்தன. ஊருக்குள் மற்றும் காடு வயல் வெளிகளில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் 5-வது நாளாக நேற்றும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை.

    மேலும் குடிநீர் வினியோகம் ஒரு சில பகுதிகளில் முற்றிலுமாக கிடைக்கவில்லை. இதனால் பல கிராமங்களில் தண்ணீருக்காக பொதுமக்கள் காலிகுடங்களுடன் காத்துக்கிடக்கின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் செல்போன்கள், டார்ச்லைட் போன்ற உபகரணங்களுக்கு சார்ச் போட முடியாமல் அப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களில் உள்ள கரும்பு, வாழை, தென்னை, தேக்கு மரங்கள் முழுவதும் சாய்ந்தன. பள்ளிகூடங்களில் உள்ள மரங்களும் சாய்ந்து கிடக்கின்றது. ஓட்டு வீடு, குடிசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அன்னவாசல் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட பல கிராம பகுதிகளுக்கு பார்வையிட எந்த அதிகாரிகளும் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிப் படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து முதலிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் கூறுகையில், புயல் தாக்கி 5 தினங்கள் ஆகியும் எங்களது ஊரை சுற்றியுள்ள வேளாம்பட்டி, காந்துப்பட்டி, முதலிப்பட்டி ஆலவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்த ஒரு அதிகாரிகளும் வர வில்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்றார்.

    மாங்குடியை சேந்த அஞ்சலை கூறுகையில், எனது ஓட்டு வீட்டில் ஓடுகள் அனைத்தும் காற்றில் பறந்துவிட்டது. நான் இந்த புயலில் தப்பித்ததே இறைவனின் செயல். ஆனால் 5 நாட்கள் ஆகியும் இதுவரை கிராம நிர்வாக அதிகாரி கூட இந்த பகுதியை வந்து பார்க்கவில்லை. எங்களது ஊருக்கு பஸ் வந்து ஐந்து நாட்கள் ஆகிறது என்றார்.

    பெருமநாட்டை சேர்ந்த பெரியையா கூறுகையில், எனக்கு 80 வயது ஆகிறது எனது ஆயுசுக்கு இதுபோன்ற ஒரு புயலை பார்த்தது இல்லை. பலத்த காற்று வீசியபோது எனது வீட்டில் ஓடுகள் அனைத்தும் மளமளவென கீழே விழுந்தன. என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்து கொண்டேன் என்றார்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். புதுக்கோட்டை மாவட்டம்
    மாப்பிளையார்குளத்தில் புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்.



    பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யவேண்டும்.  அதேபோல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வரும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் விரைவாக பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பும்.

    புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #EdappadiPalaniswami
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். #EdappadiPalaniswami #GajaCyclone
    புதுக்கோட்டை:

    வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். காலை 8 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புயல் சேத பகுதிக்கு சென்றார். பின்னர் புயல் சேதங்களை நேரில் பார்வையிட்டார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உடன் சென்று புயல் சேதங்களை ஆய்வு செய்கின்றனர்.



    புதுக்கோட்டையின் மச்சுவாடியில் இருந்து ஆய்வை தொடங்கிய முதல்வர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார். பின்னர் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். பின்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்க உள்ளார். #EdappadiPalaniswami #GajaCyclone
    ×