என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4-ம் நாளில் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (5-ந் தேதி) நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து 7-ம் தேதி காலை சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர், 12-ம் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன்பு உள்ள நித்ய புஷ்கரணி குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராமமக்களும் செய்து வருகின்றனர்.

    • வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது.
    • ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தாலுக்கா மருத்துவமனையாகவும், தலைமை மருத்துவ–மனையாகவும் செயல்பட்டு வருகிறது.

    இங்கு இறப்புக்குள்ளாகும் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களை பாதுகாக்க ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி, அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் முருகப்பா வரவேற்றார்.

    இந்த நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், துணைத் தலைவா் அறிவழகன், மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான சுப்பையன், நகரச் செயலாளர் நமசிவாயம் உட்பட கட்சி நிர்வாகிகளும், முன்னாள், இந்நாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் கட்சி பிரமுகர்கள் மாரியப்பன், தோப்புத்துறை அமானுல்லா, அம்மா பேரவை ஜின்னாஅலி உட்பட மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • நாகையில் மாணவர்களுக்கு பழங்கால கல்வெட்டு குறித்த பயிற்சி முகாம் நடை பெற்றது.
    • முகாமில் மாணவர்கள் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அருங்காட்சியகமும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    முதல் நாள் பயிற்சியில்,மாணவ-மாணவிகள் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    அப்போது அருங்காட்சியக ஊழியர்கள், அங்குள்ள புதைபொருட்கள் பற்றியும், அவை கண்டெடுக்கப்பட்ட இடம், காலம் ஆகியவை குறித்தும் மாணவ - மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.பின்னர் நாகை காயாரோகண கோவில் சென்று நேரடியாக கல்வெட்டு படி எடுத்தல், ஓலைச்சுவடி அமைப்பு முறை, வடிவம், பராமரிப்பு ஆகியவற்றை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து 2-ம் நாள் பயிற்சியில் மதுரை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியர், கல்வெட்டுகள் எழுத்துமுறை, கிரந்த, பிராமி, வட்டெழுத்துக்கள், குறியீடு, கல்வெட்டுகள் தோன்றிய விதம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

    முகாமில் கல்லூரி முதல்வர் பொன்னி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.

    • பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4-ம் நாளில் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.

    இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. தொடர்ந்து, 7-ம் தேதி காலை சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர், 12-ம் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன்பு உள்ள நித்ய புஷ்கரணி குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராமமக்களும் செய்து வருகின்றனர்.

    • இரும்பு குழாய் உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
    • கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றிரவு திடீரென ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

    இதனால் நாகூர், பட்டினச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், சி.பி.சி.எல். அதிகாரிகள், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் ஆகியோர் எண்ணெய் மிதந்து வரும் கடற்கரை பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த கிராம மக்களுடன் சி.பி.சி.எல். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து டோனியர் விமானம் மூலமாக குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை இந்திய கடலோர காவல் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடலில் கச்சா எண்ணெய் பரவி உள்ளதை நீக்குவதற்கான வழிமுறைகளான ஸ்பில் டிஸ்பரசன் பவுடர் மூலமாகவோ அல்லது குழாய் மூலம் எண்ணெயை நீக்குவதா அல்லது கடல் நீரை படிய வைத்து அதனை அகற்றுவதா என்பது குறித்தும் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் ஆய்வு செய்தனர். மேலும் எவ்வளவு தூரம் எண்ணெய் பரவி உள்ளது என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கடலில் எண்ணெய் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டினச்சேரி மீனவர்கள் கச்சா எண்ணெயை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் மீனவ கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
    • சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரியில் பள்ளிகளுக்கு அருகே 100 மீட்டர் தூரத்துக்குள் கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரதாப், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் திட்டச்சேரி மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் அரசின் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கிலோ கணக்கில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆய்வின்போது நலக்கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர்கள் மணிமாறன், ஆனந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பூந்தட்டு ஏந்தி கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.
    • அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது.

    நாகை துறைமுக கடற்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தியவாறு தாய் மூகாம்பிகை கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சாமியை வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வருகிற 7-ந்தேதி நாகப்பட்டினம் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    • விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக வழங்கின்றனர்.
    • 5 டன் காய்கறிகள், பழங்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு கேள்வி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதி பொருட்களை விவசாயிகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராட்சத யாககுண்டம் அமைத்து சுமார் 5 டன் காய்கறிகள் பழங்கள், 108 மூலிகை பொருட்கள் 2000 லிட்டர் நெய் கொண்டு 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக கேள்வி நடத்தினர்.

    அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார்.
    • 4 மாட வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த மாதம் 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார்.தேரோட்டத்தை யாழ்பானம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், குருகுலம் நிர்வாகிகள் வேதரத்தினம், கேடிலியப்பன் கோவில் செயல் அலுவலர் அறிவழகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு தியாகேசா., மறைகாடா.. என பக்தி கோஷம் மூழங்க வடம் பிடித்தனர். அதனை தொடர்ந்து 4 மாட வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    நாகப்பட்டினம்:

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளாண் இன இயக்குனர் அகண்டராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பருவம் தவறிய மழை இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நடுவே சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குகொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    விவசாயத்தை விட கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் தங்களுடைய விளை நிலங்களை எடுத்துக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததனர்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து போலீசில் பிடித்துக் கொடுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.
    • பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு அரசுக்கு, அகில பாரத மக்கள் மகாசபா நாகை மாவட்ட தலைவர் இளம் பாரதி அனுப்பி உள்ள மனுவல கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

    அனைத்து பஸ்களும் வேதாரண்யத்தில் இருந்து 55 கி.மீ தூரம் உள்ள நாகைக்க்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    மேலும் நாள்தோறும் நாகையில் உள்ள மருத்துவ கல்லூரி நீதித்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில்வே தாரணியத்தில் இருந்து சென்று பணியாற்றுபவர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.

    பொதுமக்கள் பயன்படும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

    இடையில் எங்கும் நிற்காமல் 1.15 மணி நேரத்தில் சென்று விடும்.

    ஆனால் சமீப காலமாக அந்த விரைவு பஸ்களும் நிறுத்தபட்டு விட்டன.

    சாலைகள் மேம்படுத்தப்பட்ட இன்றைய நிலையில்த ற்போது வேதாரண்யத்தில் இருந்து நாகைக்கு 1 மணி நேரத்திலேயே செல்ல இயலும்.

    எனவே வேதாரண்யத்தில் இருந்து நாகை அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக காலை 8 -9 மணிக்குள் இந்த ஒன் டூ ஒன் பஸ் 2 இயக்க வேண்டும்.மக்கள் நலன் கருதி இதனை உடனே இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டார்மங்கலம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.
    • குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அப்பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கோடை காலங்களில் முக்கிய நீர்நிலை ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த நிலையில் குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

    வயது முதிர்ந்தவர்கள் இறங்கும் போது படிகட்டுகள் இடிந்து விழுந்து காயமடைகின்றனர்.

    மேலும் அருகில் நூலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் குளத்திற்கு செல்லும் போது தவறுதலாக எதேனும் உயிர் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது.

    மேலும் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர்கள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    இதனை பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பெரியகுளத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×