என் மலர்
நாகப்பட்டினம்
- ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
- புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்தி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பி னர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
ஜெகதீஷ் (துணை தலைவர்):
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் மாணவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மண்பானையில் குடிநீர் வைக்க வேண்டும்.
ஞானசேகரன் (சிபிஎம்):
நத்தப்பள்ளம் முதல் செம்பியவேளூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், ரம்யா, முத்துலட்சுமி, தீபா ஆகிய 4 உறுப்பினர்களும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாசிலாமணி (தி.மு.க.):
கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிலாற்றங்கரையின் இருபுறமும் மண்சாலையாக உள்ளது.
இதை தார்சா லையாக மாற்றி தர வேண்டும்.
உதயகுமார் (தி.மு.க.):
தமிழக அரசு குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு முன்பு ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
கஸ்தூரி குஞ்சையன் (தி.மு.க.):
வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.
தமிழரசி (தலைவர்):
உறுப்பினர்களின் கோரிக்கை களை முன்னுரிமைகளின் அடிப்படையில் படிப்படி யாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- பங்குனி பெருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினந்தோறும் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நேற்று 4-ம் நாள் விழாவான கருட சேவையை முன்னிட்டு சௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா காட்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இடம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் உள்ள ராமநாதருக்கு ராமநவமியை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர், ராமநாதருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- நாகையில் தொழில் மையம் மூலம் ரூ. 4 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
- தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கி வருகிறது.
மேலும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மூலமாக புதிய தொழில் தொடங்குவதற்கும்,
தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும், தொழில் நிறுவனங்களுக்கான மானியங்களை பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் மாவட்டதொழில் மையம் மூலம் 2022-2023-ம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 43 பேருக்கு ரூ.37லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டிலும்,
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 137 பேருக்கு ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலும், பாரத பிரதமர் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் 65 பேருக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
- முதல்- அமைச்சர், நகராட்சி நிர்வாகம், அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றி.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
இது குறித்து ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் இது குறித்து பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்தேன்.
நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 30-ந்தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கே.என்.நேரு நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர், நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்குஷா நவாஸ் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
- வேளாங்கண்ணி பேரூராட்சியில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
- எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கூட்டு உள்ளுர் திட்டக்குழும பகுதிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சியில் அண்ணா பல்கலைகழக தொழிற்நுட்ப வல்லுனர்களுடன், நாகப்பட்டினம் நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குநர் முன்னிலையில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா மற்றும் துணைத்தலைவர் தாமல் ஆல்வா எடிசன் தலைமையில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் நிர்வாக தந்தையர்கள், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக சங்க பிரநிதிநிதிகள், தங்கும் விடுதி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் எதிர்வரும் ஆண்டுகளில் நில வகைப்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் அலுவல பணியாளர்கள் உடனிருந்தனர்.
- புதிதாக கட்டப்பட்ட நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
- 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் 60 அடி நீளமுடைய நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த மண்டல பூஜை நிறைவு பூர்த்தியை முன்னிட்டு பட்டாணி கோவிலில் இருந்து பழங்கள், வஸ்திரங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 51 வரிசை தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.
பின்னர், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி கோலிலை சுற்றி வலம் வந்து புனிதநீர் கொண்டு மகா மாரியம்மன், நாக விநாயகர், நாகம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்நது, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ரூ. 30 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
- சட்டமன்றத்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது:-
நாகப்பட்டினம் நாகூர் நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது.
நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.
இப்போது நாகப்பட்டி னத்திற்கு ஒரு புறநகர் பேருந்து நிலையம் அவசியமாகிறது. ஏற்கெனவே முதலமைச்சரிடம் 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்திருக்கிறோம்.
30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் நான் வலியுறுத்தி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.
எனவே மிக மிக அவசியமான ஒரு கோரிக்கை.
நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் போன்ற திருத்தலங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அதை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதி களும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்ப டையில் தான் சட்டமன்ற த்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி, துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றது.
முதலமைச்சர் கேட்ட 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை நீங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள்.
எனவே நிச்சயமாக இது முதல் - அமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இது நடக்கும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
- ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
- திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்ட்டது.
நாகப்பட்டினம்:
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாகப்பட்டிணம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஸ்ரீதேவி மூதேவி சமேத சௌந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஆலய முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பினர் அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தலரோட்டை சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது.
இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
- வேளாக்குறிச்சி ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமரு கலில் ஆமோதள நாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ மற்றும் லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, 24-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாஹுதி, தீபாராதனையும், 25-ம் தேதி 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், இரவு பரிவார முகூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம், பூர்ணாஹுதியும், 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (27-ந்தேதி) காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அடுத்தாக கடம் புறப்பாடு நடைபெற்று விமானங்கள் மற்றும் ராஜ கோபுரங்கள் கும்பாபிஷேகம் மற்றும் மூலமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குரு மகா சன்னிதானம் திருப்புகலூர் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, மாலை மகாபிஷேகம், தீபாராதனையும், இரவு ஆமோதள நாயகி ரத்தினகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பூரணா புஷ்கலா சமேத அன்னப்ப சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 7-ம் ஆண்டை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் குடங்கள் வைத்து சிறப்பு பூஜை யாகம் நடைபெற்றது.
பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு சீர் பலகாரம், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை சென்னை சேர்ந்த குருமூர்த்தி, லட்சுமி நாராயணன், குமார் மற்றும் பலர் செய்து இருந்தனர்.






