என் மலர்
நீங்கள் தேடியது "அலங்காரம்"
- புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பூரணா புஷ்கலா சமேத அன்னப்ப சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 7-ம் ஆண்டை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் குடங்கள் வைத்து சிறப்பு பூஜை யாகம் நடைபெற்றது.
பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு சீர் பலகாரம், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை சென்னை சேர்ந்த குருமூர்த்தி, லட்சுமி நாராயணன், குமார் மற்றும் பலர் செய்து இருந்தனர்.
- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
- 4 வீதிகளை சுற்றுவந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தாலுகா, நீடூர் சோமநாதர் சுவாமி கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்பாள் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து 27-ஆம் தேதி காப்பு கட்டுதல், மே 2-ஆம் தேதி பால்குடம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது.
உற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்ப ட்டார்.
பின்னர், மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர் தேரை இழுத்தனர்.
முஸ்லிம், கிரிஸ்டன், இந்து வசிக்கும் கோயிலின் நான்கு வீதிகளைச் சுற்றுவந்து மீண்டும் நிலையை அடைந்தது.
வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.
மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டின் முன்பு அம்பாளுக்கு மலர் சாற்றி, தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.
இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழா நிகழ்ச்சி ஏற்பாடு களை நீடூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்






