search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    • 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
    • வேளாக்குறிச்சி ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கலில் ஆமோதள நாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ மற்றும் லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, 24-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாஹுதி, தீபாராதனையும், 25-ம் தேதி 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், இரவு பரிவார முகூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம், பூர்ணாஹுதியும், 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று (27-ந்தேதி) காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அடுத்தாக கடம் புறப்பாடு நடைபெற்று விமானங்கள் மற்றும் ராஜ கோபுரங்கள் கும்பாபிஷேகம் மற்றும் மூலமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குரு மகா சன்னிதானம் திருப்புகலூர் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை மகாபிஷேகம், தீபாராதனையும், இரவு ஆமோதள நாயகி ரத்தினகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×