என் மலர்
நாகப்பட்டினம்
- போலீசார் நெய்விளக்கு மன்னப்பயன்கட்டளை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- 2 பேர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நெய்விளக்கு மன்னப்பயன்கட்டளை கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ராமராஜன் (வயது31), சுப்பிரமணியன் (62) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்
- மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஆனைமங்கலம் அருகே ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
Liquor smuggler on motorcycle arrestedஇதில் அவர் திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த முரளி ராஜன் மகன் சித்திரவேல் (வயது21) என்பதும், மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் கிராமத்தில் உள்ள மேலமறை க்காடர் கோவிலில் முதலாம் ஆண்டு சம்வஸ்தராபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
விழாவையொட்டி கோபூஜை, கும்ப பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதியுடன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பிள்ளையார், முருகன், காலபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜையில் செவ்வந்திநாத பண்டாரசன்னதி கயிலைமணி வேதரத்னம் உள்பட பிரமுகர்களும், கோவில் திருப்பணி குழுவினரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
- நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
- வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. மழையால் வேதாரண்யம் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது. இந்த கோடை மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்கிறோம். 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு அதிகளவில் பக்தர்கள், கூற்றுலுா பயணிகள் வருவர். இவர்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக வேளாங்கண்ணியில் அதிகளவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன்தலைமையில் நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் செல்வகுமார் மற்றும் சிவசேனா கட்சி, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் தன்னார்வளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+2
- தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
- மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.
இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
அப்போது மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.
இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று நடைபெறும் குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு டிரைவர், வழிக்காட்டுனருடன் 49 பேர் பஸ்சில் திருச்சூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். மொத்தம் 51 பேர் பஸ்சில் இருந்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை ஒவ்வொருவறாக பஸ்சில் இருந்து வெளியே மீட்டனர்.
இந்த விபத்தில் திருச்சூரை சேர்ந்த வர்க்கீஸ் மனைவி லில்லி (வயது 63), ஜோசப் மகன் ராயன் (9) ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் சிலருக்கு கை, கால் துண்டானது. விபத்துக்குள்ளான பஸ்சும் சேதமடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா மற்றும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
- புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்தி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பி னர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
ஜெகதீஷ் (துணை தலைவர்):
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் மாணவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மண்பானையில் குடிநீர் வைக்க வேண்டும்.
ஞானசேகரன் (சிபிஎம்):
நத்தப்பள்ளம் முதல் செம்பியவேளூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், ரம்யா, முத்துலட்சுமி, தீபா ஆகிய 4 உறுப்பினர்களும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாசிலாமணி (தி.மு.க.):
கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிலாற்றங்கரையின் இருபுறமும் மண்சாலையாக உள்ளது.
இதை தார்சா லையாக மாற்றி தர வேண்டும்.
உதயகுமார் (தி.மு.க.):
தமிழக அரசு குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு முன்பு ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
கஸ்தூரி குஞ்சையன் (தி.மு.க.):
வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.
தமிழரசி (தலைவர்):
உறுப்பினர்களின் கோரிக்கை களை முன்னுரிமைகளின் அடிப்படையில் படிப்படி யாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- பங்குனி பெருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினந்தோறும் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நேற்று 4-ம் நாள் விழாவான கருட சேவையை முன்னிட்டு சௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா காட்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இடம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் உள்ள ராமநாதருக்கு ராமநவமியை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர், ராமநாதருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- நாகையில் தொழில் மையம் மூலம் ரூ. 4 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
- தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கி வருகிறது.
மேலும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மூலமாக புதிய தொழில் தொடங்குவதற்கும்,
தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும், தொழில் நிறுவனங்களுக்கான மானியங்களை பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் மாவட்டதொழில் மையம் மூலம் 2022-2023-ம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 43 பேருக்கு ரூ.37லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டிலும்,
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 137 பேருக்கு ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலும், பாரத பிரதமர் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் 65 பேருக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
- முதல்- அமைச்சர், நகராட்சி நிர்வாகம், அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றி.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
இது குறித்து ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் இது குறித்து பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்தேன்.
நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 30-ந்தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கே.என்.நேரு நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர், நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்குஷா நவாஸ் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.






