என் மலர்
நாகப்பட்டினம்
- தானேவில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது.
- விபத்தில் கண்ணன் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் வேதரத்தினம். பெயிண்டர். இவருடைய மகன் கண்ணன் (வயது23). தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை தானேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.
இவர் கடந்த 31-ந் தேதி நள்ளிரவில் மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கண்ணன் உள்பட 20 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
விபத்தில் பலியான கண்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உறவினர்களிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று காலை உடல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவருடைய பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவருடைய உடல் நேற்று மதியம் அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. கிரேன் விபத்தில் என்ஜினீயர் ஒருவர் உயிரிழந்தது வேதாரண்யம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தக்காளி விலை உயர்வு அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அம்மனுக்கும் 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவிக்கப்பட்டது
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை வெகு நடைபெற்றது.
திருமணத்தடை குழந்தை பாக்கியம் கல்வி மற்றும் செல்வம் ஆகியவை பெறுக வேண்டி சிறப்பு பரிகார பூஜைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், தற்போது வரலாறு காணாத அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்து வரும் தக்காளி விலையால் அடித்தட்டு ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தக்காளியின் விலை குறைய வேண்டி, அம்மனுக்கும், மதுரை வீரனுக்கும் தனித்தனியே 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
மலர் மாலை எலுமிச்சை பழம் மாலை உடன் சேர்த்து தக்காளியையும் மாலையாக அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் நாகை திருவாரூர் காரைக்கால் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
- காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.
- 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
சென்னை அம்பத்தூர் கலைவாணர் நகரை சேர்ந்த மூதாட்டி மல்லிகா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து மல்லிகாவின் மகன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பினர். இந்த தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணமல் போன மல்லிகா புனேவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் புனே சென்று மல்லிகா மீட்டு நாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரை நாகப்பட்டினத்திற்கு அழைத்து மல்லிகாவை ஒப்படைத்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கிடைத்த சந்தோசத்தில் மகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்வாறு திறம்பட செயல்பட்ட நாகை மாவட்ட போலீசாரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பாராட்டியதுடன் காணாமல் போன மூதாட்டியையும் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
- மேலப் போலகம் தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடப் பணியை நாகை எம் எல் ஏ முகமது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை அப்போது வலியுறுத்தினார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரம் தொடக்க ப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், எரவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், போலகம் ஊராட்சி மேலப் போலகம் தொட க்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருவதாகவும் விரைந்து அங்கும் பணிகள் முடிக்கப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் நவீன பெஞ்ச் டெஸ்க் வசதியுடன் வகுப்பறை கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
- திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.
- கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு திருமருகல், கரையிருப்பு, சேகல், வள்ளுவன்தோப்பு, ஆண்டிதோப்பு, கட்டலாடி மற்றும் சுற்று வட்டா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைக்கு மருத்துவம் பார்க்க திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவுகிறது.
இந்தநிலையில் திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர், நிரந்தர கால்நடை பராமரிப்பு உதவியாளர், நிரந்தர கால்நடை ஆய்வாளர் இல்லாத காரணத்தால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உடன் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
- படித்துறை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
இக்குளத்தில் படித்துறை இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை அமைத்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அரசு கோரிக்கையை ஏற்று பொது நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- மல்லிகா தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
- திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
நாகப்பட்டினம்:
ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளராக மல்லிகா பணியாற்றி வருகிறார். 1984 ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்த இவர் திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த அலுவலர் மல்லிகா உதவியாளர், விரிவாக்க அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் என உயர் பதவிகளை அடைந்து தற்போது நாகை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலராக பணியாற்றினார்.
இந்தநிலையில் அரசு அலுவலர் மல்லிகாவின் பணி ஓய்வு நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட மல்லிகா தனது அரசு பணியில் 39 வருடம் 6 மாதங்கள் 9 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பணி ஓய்வு நிகழ்ச்சியில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பிரியா விடைகொடுத்தனர்.
- 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
- நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.
இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.
- தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
- இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் சந்திரசேகர் (வயது 65). விவசாயி.
இவர் நேற்று காலை 11 மணியளவில் முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலை 3 மணி அளவில் திரும்பி ஆற்றில் இறங்கி வந்துள்ளார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் திருமருகல் தீயணைப்புத் துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவிலுக்கு சென்றவர் ஆற்றில் மூழ்கி முதியவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த கலை மாதவன் (வயது 36), வேளாங்கண்ணி செட்டித்தெரு ஜெயமாதா இல்லம் பகுதியை சேர்ந்த ஜூடு அருள்பிரகாசம் ( 49) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் ரெயில்வே கேட் அருகே காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அதில் கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி அதனை காரின் மூலம் மதுரை வழியாக வேதாரணியம் கொண்டு வந்து இலங்கைக்கு கடத்த இருப்பது தெரிய வந்தது.
இந்த கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த ரவி, கோடியக்காட்டை சேர்ந்த லட்சுமணன், சேத்தாகுடி சேர்ந்த ரவி, வேதமணி, மதுரை சேர்ந்த மாயகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சமாகும்.
- ரூ.25 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
- பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த வழகறிஞர் நாமசிவாயம், சமூக ஆர்வலர் வசந்தி செல்வகுமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






