என் மலர்
நாகப்பட்டினம்
- 2-ம் தர நண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- மீன்களின் விலை அதிகரித்ததால் மீன் பிரியர்கள் கவலை அடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீன்பிரியர்கள் குவிந்ததால் மீன்பிடி துறைமுகம் நிரம்பி வழிந்தது. ஆனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டதால் மீன் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சரம் மீன் 750 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்பனையான சீலா மீன் 480 ரூபாய்க்கும், கரட்டை மீன் 370, கிளி மீன் 350 ரூபாய், கடல் விறால் 600, என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல இறால் 700 ரூபாய்க்கும், முதல் ரக நண்டு நண்டு 700 ரூபாய்க்கும், இரண்டாம் தர நண்டு 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
4 ஆயிரம் லிட்டர் முதல் டீசல் செலவு செய்து, ஐஸ், மீன்பிடிக்க தேவையான தளவாட பொருட்கள் , ஆட்கள் கூலி என 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் தொழில் நஸ்டம் ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஒரு விசைப்படகில் 10 நபருக்கு மேல் தொழிலுக்கு செல்வதால் படகு உரிமையாளர் மட்டுமின்றி வேலையாட்கள் மற்றும் அவர்களின் குடும்பம் என 40 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். இருந்தபோதிலும் மீன்களின் விலையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் குவிந்த மீன்பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
- குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களுக்கு அபராதம்.
- 3 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது பல்வேறு நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க ப்பட்டு வருகிறது. இதை யட்டி தலைஞா யிறுபகு திகளில் சட்டவி ரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு அவர்களது மின்மோட்டோர்களும் பரிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் எச்சரிக்கை செய்து இருந்தார்
இந்த நிலையில் நேற்று தலைஞாயிறு ஐந்தாவது வார்டு சிந்தாமணி தெருவில் குடிநீர் குழாய்களில் சட்டவிராதமாக மின்மோ ட்டா ர் வை த்து குடிநீ ர் எடு ப்ப தாக கிடை த்த தகவ லின் பேரில் திடீரென பேரூராட்சி பணியாளர்கள் சென்று சோதனை செய்ததில் அப்பகுதியில் மூன்று வீடுகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது தெரிய வந்தது உடனடியாக பேரூராட்சி ஊழியர்கள் 3 மின் மோ ட்டா ர்க ளை யும் பறி முதல் செ ய்து பேரூ ராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் கூடியதாவது தலைஞாயிறில் பேரூராட்சியில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மின்னோட்டார்கள் பறிமுதல் செய்து வழக்கு தொடரப்பட்டும் மேலும்சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர்எடுப்பவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.
- 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- மேளம் அடித்தபடி ஒப்பாரி வைத்து அழுது கொடும்பாவியை இழுத்து வந்தனர்.
நாகப்பட்டினம்:
காவிரி கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் சாகுபடிக்கான தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் விதைத்த நெல் மணிகள் முளைக்காமலும் , முளைத்த நெற்பயிர்கள் கருகவும் தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டு கோடை மழையும் எதிர் பார்த்த அளவுக்கு பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடியானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகை எட்டுக்குடியில் வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி கொடும்பாவி இழுத்து விவசாயிகள் நூதன வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.
மழையின்றி வாடும் நேரங்களில் இதுபோல செய்தால் மழை பெய்யும் என்ற அந்த கால ஐதீகப்படி களி மண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்றின் நடுவே தீச்சட்டி வைத்து தெருத் தெருவாக பாத்திரங்களில் மேளம் அடித்தபடி ஒப்பாரி வைத்து அழுது கொடும்பாவியை இழுத்து வந்தனர்.
மேலும் கொடும்பாவியை சுற்றி நின்று விவசாயிகள் கைதட்டி கேலி செய்து மழையை தருமாறு வருணபகவானிடம் முறையிட்டு நூதன வழிபாட்டில் ஈடுப்பட்டனர். காவிரி நீர் கை கொடுக்காத நிலையில் மழை பெய்தால் மட்டுமே நெற்பயிரை காப்பாற்ற முடியும் என்பதால் வருண பகவானிடம் மழை வேண்டி வழிபட்டுள்ளோம் என்றனர்.
- சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.
தற்போது, கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
- காவடி எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
- கோவிலை சுற்றி அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபக்தா் குளம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து முதல் நாள் பயத்தவரன்காடு கிராமவாசிகளால் வேதாரண்யேஸ்வரர் கோவிலிருந்து வண்ண மலர்களும், மின் விளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சென்றடைந்தது.
அதன் பின்னர் காவடி எடுத்து வரப்பெற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பயத்தவரன்காடு கிராம தலைவர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். இதில் கோவில் ஆதின வித்வான் கேசவன் குழுவினர் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளம், வான வேடிக்கையும் நடந்தது.
- ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- திட்டச்சேரி அரசு பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
- கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 62-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பூங்குழலி தலைமை தாங்கினார்.
பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகமது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் தலைவர் ஆனந்த், செயின்ட் மைக்கேல் அகாடமி தலைவர் ஆல்பிரட் ஜான்,பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் ஜெயினுல் ஆபிதீன்,முகமது ஷெரீப், அப்துல் நாசர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி வளர்ச்சி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
- செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
- கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் பணிபுரியும் ஊழியர்களும் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அங்கு படிக்கும் மாணவர்களும் பணிபுரியும் ஊழியர்களும் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்ததுடன், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாணவர்களுக்கான பெஞ்ச் டெஸ்க் 40, ஊழியர்களுக்கான மேஜைகள் மற்றும் இருக்கைகள் 25 ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் கல்லூரியின் முகப்பில் கல்வெட்டு பாலம் அமைப்பதுடன் நுழைவாயில் வளைவும் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக ஷா நவாஸ் எம்.எல்.ஏ.வுக்கு கல்லூரியின் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
- கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் விதைத்த நெல் மணிகள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
- களைப்பு தெரியாமல் இருக்க சினிமா, கிராமிய பாடல்களை பாடியபடி நடவுப் பணிகளில் ஈடுப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நாகை , திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டனர்.
குறிப்பாக காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுப்பட்டனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் விதைத்த நெல் மணிகள் கருகியும், முளைப்புத் தன்மையும் இல்லாமல் போனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இருந்தும் மனம் தளராத விவசாயிகள் இயற்கையின் மீதான நம்பிக்கையில் ஆடிப்பட்டம் தேடி விதைக்கனும் என்ற முது மக்களின் சொல்லாடலுக்கு ஏற்ப தற்போது குறுவை நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஆடி 18 என்பதால் விவசாயிகள் தங்களுடைய வயல்களில் வழிப்பட்டு நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். அப்போது நடவுப் பணிகளில் ஈடுப்படும் பெண்கள் வெயில், களைப்பு தெரியாமல் இருக்க சினிமா, கிராமிய பாடல்களை பாடியபடி நடவுப் பணிகளில் ஈடுப்பட்டனர்.
ஒரு பெண் ராகம் இழுத்து பாட அதை மற்றப் பெண்கள் கோரஸாக வாங்கி உற்சாகமாக பாடி மகிழ்ந்தனர்.
- தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழா நடந்தது.
- தினசரி உடையார்பாளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது.
தினசரி உடையார்பா ளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.
விழாவை தொடர்ந்து நாளை ( சனிக்கிழமை) அரவாண் களப்பலியும், 6-ம் தேதி அன்று அர்ச்சுணன் தபசும் நடக்கிறது.
7-ம் தேதி படுகள நிகழ்ச்சியும், தொடர்ந்து திரவுபதையம்மன் கூந்தல் முடிதலும் நடக்கிறது.
மாலை 4 மணியளவில் அம்மன் வீதியுலாவாக புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் அக்னிபிரவேசம் எனப்படும் தீமிதி விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார்கள் செய்து வருகிறார்கள்.
- 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
- வேதாரண்யம் மாணவி மஹாதி 2-ம்இடம் பெற்றுகோப்பை பெற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி ராஜாளி காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - வேதா தம்பதியினரின் மகள் மஹாதி (வயது 11).இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்ற ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மனநிலை வேக எண்கணித போட்டியில் (அபாகஸ்) முதலிடம் பெற்றார்.
தற்போது சென்னை மகாபலிபுரத்தில் உலக அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் பங்கு பெற்றார்.
இதில் 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் வேதாரணியம் மாணவி மஹாதி இரண்டாம் இடம் பெற்றுகோப்பை மற்றும் வெள்ளி பதக்கத்தை பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவி மஹாதியை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் பாராட்டினார் .
- சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் வண்ண புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்தஅண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் போன் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைவு தினம்,தேசிய வண்ண புத்தகங்கள் தினம், இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்களி வெங்கையா பிறந்தநாள் ,தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகள் பிறந்தநாள் தினவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் இரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன்,சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி,ஆனந்தன் பள்ளி மேலாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவ -மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.






