search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபாகஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
    X

    வெற்றி பெற்ற மாணவி மஹாதியை கலெக்டர் பாராட்டினார் .

    அபாகஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

    • 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
    • வேதாரண்யம் மாணவி மஹாதி 2-ம்இடம் பெற்றுகோப்பை பெற்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி ராஜாளி காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - வேதா தம்பதியினரின் மகள் மஹாதி (வயது 11).இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சென்ற ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மனநிலை வேக எண்கணித போட்டியில் (அபாகஸ்) முதலிடம் பெற்றார்.

    தற்போது சென்னை மகாபலிபுரத்தில் உலக அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் பங்கு பெற்றார்.

    இதில் 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் வேதாரணியம் மாணவி மஹாதி இரண்டாம் இடம் பெற்றுகோப்பை மற்றும் வெள்ளி பதக்கத்தை பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவி மஹாதியை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் பாராட்டினார் .

    Next Story
    ×