search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dimithi"

    • தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழா நடந்தது.
    • தினசரி உடையார்பாளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது.

    தினசரி உடையார்பா ளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.

    விழாவை தொடர்ந்து நாளை ( சனிக்கிழமை) அரவாண் களப்பலியும், 6-ம் தேதி அன்று அர்ச்சுணன் தபசும் நடக்கிறது.

    7-ம் தேதி படுகள நிகழ்ச்சியும், தொடர்ந்து திரவுபதையம்மன் கூந்தல் முடிதலும் நடக்கிறது.

    மாலை 4 மணியளவில் அம்மன் வீதியுலாவாக புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் அக்னிபிரவேசம் எனப்படும் தீமிதி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார்கள் செய்து வருகிறார்கள். 

    • முத்துமாரியம்மன் கோவில் தீமிதித்து வழிபாடு நடந்தது.
    • நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. விஸ்வகர்மா மகாசபை சங்கம் நடத்தும் 155-ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-வது வெள்ளிக்கிழமை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அழகு குத்தி வந்து கோவில் முன்புறம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவழும் பிள்ளை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து வானவேடிக்கையோடு சாமியாடி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.

    ×