என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.
    • பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் வாங்க பேசலாம் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் புயல் குமார், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, கிளை தலைவர் தொல்காப்பியன், செயலாளர் குழந்தைவேலு, துணை தலைவர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தேத்தாக்குடி காசிராஜன், மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர்.

    1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.

    கவிஞர்கள் புவனேஸ்வரி, சவுமியா, சுதா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

    பெண்ணிய ஓவியங்களை வரைந்த செல்வி் அமிதா, நித்தியா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

    இதில் கவிஞர் வெற்றிச்செல்வன், அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, பேராசிரியர் மாரிமுத்து, வக்கீல் வைரமணி, ஆசிரியர்கள் மோகனசுந்தரம், செந்தில்நாதன், அமிர்த லிங்கம், சத்யராஜ், சமூக ஆர்வலர் வசந்தி செல்வ குமார், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, கவிஞர்கள் கார்த்திகேயன், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி நாகப்பட்டினம் மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது.

    குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனை அடைந்து வந்துள்ளனர். மனகஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளை அணுகி எந்த பலனும் அளிக்காத நிலையில் தனது தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய சரண்யா நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து சரண்யா கருவுற்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பின்னர் சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. முறையான உருவமே இல்லாத நிலையில் 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு டாக்டர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்த குழந்தையை தரமான சிகிச்சையால் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.

    செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு குழந்தையை மீட்ட டாக்டர்கள் பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டி பின்னர் நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் பிறந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த தாய்ப்பால் வார நிறைவு விழாவில் குழந்தையை பெற்றோர்களிடம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மகிழ்ச்சியோடு ஒப்படைத்தார்.

    நாகையில் 540 கிராம் எடை கொண்ட குழந்தையை போராடி காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்த நாகை அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
    • சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகளூர் ஊராட்சியில் கால்நடை பரா மரிப்புத்துறை, தஞ்சாவூர் ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 2-ம் கட்ட சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வருகிற 10-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    முகாமில் கால்நடைகளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், கன்றுகளுக்கு கன்று வீச்சு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடுதல், செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல், ஆடுகளுக்கு துள்ளுமாரி தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடைபெற உள்ளது.

    மேலும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு பயிற்சி, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளும் கால்நடை வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, படையல் இட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு, யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.

    இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

    முன்னதாக தெத்தேரியிலிருந்து பக்தா்கள் புனித நீராடி, கம்ப விளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து வடை மாலை, வாழைத்தார், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடா்ந்து, அரிச்சந்திரா புராண நாடகம் நடந்தது.

    விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, வருகிற 9-ந் தேதி விளக்கு பூஜை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை விழா நிர்வாக குழுவினரும், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.

    • தட்டிப்பாலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சேதமடைந்துள்ளது.
    • பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்க ண்ணபுரம் ஊராட்சி வடசாரி தெருவில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் தேவைகளுக்கு திருக்கண்ணபுரம் பஸ் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், சௌரிராஜ பெருமாள் கோவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்,நூலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்று வர நரிமணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தட்டிப்பாலத்தை பயன்ப டுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தட்டிப்பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சேதம் அடைந்து உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் நிலை உள்ளது.

    தற்போது நரிமணியாற்றில் காவிரி நீர் வந்துள்ளதால் ஆற்றைக் கடக்க முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த தட்டிப் பாலத்தை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்-அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி யில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமையில் தலைஞாயிறு பஸ் நிலை யத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் கன கராஜ், மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா, மூத்த உறுப்பினர்கள் ஞானசி காமணி, மணி மேகலை, இளைஞர் காங்கி ரஸ் கார்த்தி ஹரி உள்ளிட்ட தொண்ட ர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து கையெழு த்திட்டனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் கூறுகையில்:-

    தலைஞாயிறு பேரூராட்சி க்கு உட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தி சுமார் 5 ஆயிரம் பேரிடம் கையெ ழுத்து பெற்று முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாதா மற்றும் அந்தோனியார் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேரா லயத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் அந்தோ னியாரின் பெரியதிருத்தேர் பவனி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ஆலயத்தில், வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சப்ப ரத்தில், மாதா மற்றும் அந்தோனியாரின் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டு,புனிதம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த னர்.

    இதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • 2-ம் தர நண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மீன்களின் விலை அதிகரித்ததால் மீன் பிரியர்கள் கவலை அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீன்பிரியர்கள் குவிந்ததால் மீன்பிடி துறைமுகம் நிரம்பி வழிந்தது. ஆனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டதால் மீன் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சரம் மீன் 750 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்பனையான சீலா மீன் 480 ரூபாய்க்கும், கரட்டை மீன் 370, கிளி மீன் 350 ரூபாய், கடல் விறால் 600, என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல இறால் 700 ரூபாய்க்கும், முதல் ரக நண்டு நண்டு 700 ரூபாய்க்கும், இரண்டாம் தர நண்டு 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    4 ஆயிரம் லிட்டர் முதல் டீசல் செலவு செய்து, ஐஸ், மீன்பிடிக்க தேவையான தளவாட பொருட்கள் , ஆட்கள் கூலி என 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் தொழில் நஸ்டம் ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஒரு விசைப்படகில் 10 நபருக்கு மேல் தொழிலுக்கு செல்வதால் படகு உரிமையாளர் மட்டுமின்றி வேலையாட்கள் மற்றும் அவர்களின் குடும்பம் என 40 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். இருந்தபோதிலும் மீன்களின் விலையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் குவிந்த மீன்பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

    • குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்களுக்கு அபராதம்.
    • 3 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது பல்வேறு நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க ப்பட்டு வருகிறது. இதை யட்டி தலைஞா யிறுபகு திகளில் சட்டவி ரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு அவர்களது மின்மோட்டோர்களும் பரிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் எச்சரிக்கை செய்து இருந்தார்

    இந்த நிலையில் நேற்று தலைஞாயிறு ஐந்தாவது வார்டு சிந்தாமணி தெருவில் குடிநீர் குழாய்களில் சட்டவிராதமாக மின்மோ ட்டா ர் வை த்து குடிநீ ர் எடு ப்ப தாக கிடை த்த தகவ லின் பேரில் திடீரென பேரூராட்சி பணியாளர்கள் சென்று சோதனை செய்ததில் அப்பகுதியில் மூன்று வீடுகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது தெரிய வந்தது உடனடியாக பேரூராட்சி ஊழியர்கள் 3 மின் மோ ட்டா ர்க ளை யும் பறி முதல் செ ய்து பேரூ ராட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் கூடியதாவது தலைஞாயிறில் பேரூராட்சியில் சட்ட விரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மின்னோட்டார்கள் பறிமுதல் செய்து வழக்கு தொடரப்பட்டும் மேலும்சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர்எடுப்பவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

    • 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மேளம் அடித்தபடி ஒப்பாரி வைத்து அழுது கொடும்பாவியை இழுத்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    காவிரி கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் சாகுபடிக்கான தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் விதைத்த நெல் மணிகள் முளைக்காமலும் , முளைத்த நெற்பயிர்கள் கருகவும் தொடங்கி உள்ளது.

    இந்த ஆண்டு கோடை மழையும் எதிர் பார்த்த அளவுக்கு பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடியானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகை எட்டுக்குடியில் வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி கொடும்பாவி இழுத்து விவசாயிகள் நூதன வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.

    மழையின்றி வாடும் நேரங்களில் இதுபோல செய்தால் மழை பெய்யும் என்ற அந்த கால ஐதீகப்படி களி மண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்றின் நடுவே தீச்சட்டி வைத்து தெருத் தெருவாக பாத்திரங்களில் மேளம் அடித்தபடி ஒப்பாரி வைத்து அழுது கொடும்பாவியை இழுத்து வந்தனர்.

    மேலும் கொடும்பாவியை சுற்றி நின்று விவசாயிகள் கைதட்டி கேலி செய்து மழையை தருமாறு வருணபகவானிடம் முறையிட்டு நூதன வழிபாட்டில் ஈடுப்பட்டனர். காவிரி நீர் கை கொடுக்காத நிலையில் மழை பெய்தால் மட்டுமே நெற்பயிரை காப்பாற்ற முடியும் என்பதால் வருண பகவானிடம் மழை வேண்டி வழிபட்டுள்ளோம் என்றனர்.

    • சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.

    தற்போது, கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    • காவடி எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • கோவிலை சுற்றி அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபக்தா் குளம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து முதல் நாள் பயத்தவரன்காடு கிராமவாசிகளால் வேதாரண்யேஸ்வரர் கோவிலிருந்து வண்ண மலர்களும், மின் விளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சென்றடைந்தது.

    அதன் பின்னர் காவடி எடுத்து வரப்பெற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பயத்தவரன்காடு கிராம தலைவர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். இதில் கோவில் ஆதின வித்வான் கேசவன் குழுவினர் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளம், வான வேடிக்கையும் நடந்தது.

    ×