search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைஞாயிறில், கையெழுத்து இயக்கம் தொடக்கம்
    X

    கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    தலைஞாயிறில், கையெழுத்து இயக்கம் தொடக்கம்

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்-அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி யில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமையில் தலைஞாயிறு பஸ் நிலை யத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் கன கராஜ், மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா, மூத்த உறுப்பினர்கள் ஞானசி காமணி, மணி மேகலை, இளைஞர் காங்கி ரஸ் கார்த்தி ஹரி உள்ளிட்ட தொண்ட ர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து கையெழு த்திட்டனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் கூறுகையில்:-

    தலைஞாயிறு பேரூராட்சி க்கு உட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தி சுமார் 5 ஆயிரம் பேரிடம் கையெ ழுத்து பெற்று முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×