என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் படகு"
- நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
நெல்லை:
அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் வானிலை மைய அறிவிப்பை அடிப்படையாக கொண்டு நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான கூத்தங்குழி, கூட்டப்பனை, பஞ்சல், இடிந்தகரை, கூடங்குளம், கூடுதாழை, உவரி உள்ளிட்ட 9 கிராம மக்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் சுமார் 1,200 நாட்டுப்படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த தடையால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
- படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர்.
வேதாரண்யம்:
நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடப்பது உண்டு. இந்நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறைமுகம் கடல் பகுதியில் சுமார் 4 நாட்டிக்கல் தொலையில் ஒரு படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கு இன்று காலை தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த படகையும், அதில் இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு வேதாரண்யம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 25), ஸ்ரீகாந்த் (37), ரீகன் (45) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
- 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
இந்திய வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமையர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கு நல உதவிகள் செய்கிறார்.
- மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்குகிறது.
தூத்துக்குடி:
கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துைற உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்கு வரத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 262 பதிவு செய்யப்பட்ட படகுகள் உள்ள நிலையில் மீன்பிடி விசைப்படகு சங்கத்தினர் 61 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்வதால் மீன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 130 விசைப்படகுகள் இன்றும், 132 விசைப்படகுகள் நாளையும் கடலுக்கு செல்கின்றனர். முதல் நாளான இன்று விசைப்படகு கடலுக்கு செல்வதை வரவேற்கும் வகையில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து உற்சாகமாக கடலுக்கு புறப்பட்டு சென்றன.
இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-
கடந்த 2 மாதங்களாக மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வந்ததால் நாங்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ஏற்கனவே தூத்துக்குடி துறைமுக கடலில் கடல் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அதற்கு முன்பாகவே நாங்கள் 3 மாதகாலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் இருந்து வந்தோம். எனவே இன்று மிகுந்த எதிர்பார்ப்போடு நாங்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம் என்று கூறினர்.
முன்னதாக மீனவர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்தனர். 2 மாதத்திற்கு பின்பு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் செல்வதை பார்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் வந்திருந்தனர்.
தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தர்மபிச்சை என்பவர் கூறுகையில், மீனவர்கள் ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்து வருகிறோம். அதை நிறைவேற்றப் படாமலேயே இருந்து வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கு நல உதவிகள் செய்கிறார். இது குறித்தும் அவர் நடவடிக்கை வேண்டும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்குகிறது. கூடுதலாக ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ. 6 ஆயிரம் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- மீன்பிடித் துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
- தமிழக மீன்வளத்துறை சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பொன்னேரி:
பொன்னேரிஅடுத்த, பழவேற்காட்டில் 16 குப்பங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்று விட்டு முகத்துவாரம் வழியாக கரை திரும்பும் படகுகளை மீனவர்கள் பல ஆண்டுகளாக உப்பங் கழி ஏரிக்கரையில் நிறுத்தி வருகின்றனர். காமராஜர், அதானி துறைமுகம் ஆகியவற்றின் வருகையால் கடலும், ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுக்கள் உருவாகி இயல்புநிலை நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு ஏரியில் நீர் கொந்தளிப்பு ஏற்படும் போது கரையோரம் நிறுத்தப்படும் படகுகள், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் மீன்பிடித் துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
அதன் அடிப்படையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரங்கம் குப்பம்-வைரவன் குப்பம் இடையே 500 மீட்டர் இடைவெளியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, தேசிய வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக தமிழக மீன்வளத்துறை சார்பில் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அப்பகுதி மீனவர்களின் எதிர்ப்பால் மாற்று இடத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் அங்குள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
பெரும்பாலான மீனவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் பாதுகாப்பானது அல்ல என்பதால், கூனங்குப்பம் வடக்கு பகுதியில் மீன் பிடி துறைமுக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கூறுகையில்:-
மீனவர்களின் கருத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீன்பிடி துறைமுகத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






