search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்
    X

    நாகை துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்.

    நாகை துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்

    • 2-ம் தர நண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மீன்களின் விலை அதிகரித்ததால் மீன் பிரியர்கள் கவலை அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீன்பிரியர்கள் குவிந்ததால் மீன்பிடி துறைமுகம் நிரம்பி வழிந்தது. ஆனால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டதால் மீன் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்பனையான பாறை மீன் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சரம் மீன் 750 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்பனையான சீலா மீன் 480 ரூபாய்க்கும், கரட்டை மீன் 370, கிளி மீன் 350 ரூபாய், கடல் விறால் 600, என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல இறால் 700 ரூபாய்க்கும், முதல் ரக நண்டு நண்டு 700 ரூபாய்க்கும், இரண்டாம் தர நண்டு 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    4 ஆயிரம் லிட்டர் முதல் டீசல் செலவு செய்து, ஐஸ், மீன்பிடிக்க தேவையான தளவாட பொருட்கள் , ஆட்கள் கூலி என 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் தொழில் நஸ்டம் ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஒரு விசைப்படகில் 10 நபருக்கு மேல் தொழிலுக்கு செல்வதால் படகு உரிமையாளர் மட்டுமின்றி வேலையாட்கள் மற்றும் அவர்களின் குடும்பம் என 40 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். இருந்தபோதிலும் மீன்களின் விலையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் குவிந்த மீன்பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

    Next Story
    ×