search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டர் நியமிக்க வேண்டும்
    X

    திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனை.

    அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டர் நியமிக்க வேண்டும்

    • திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.
    • கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது.

    இந்த மருத்துவமனைக்கு திருமருகல், கரையிருப்பு, சேகல், வள்ளுவன்தோப்பு, ஆண்டிதோப்பு, கட்டலாடி மற்றும் சுற்று வட்டா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைக்கு மருத்துவம் பார்க்க திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவுகிறது.

    இந்தநிலையில் திருமருகல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர், நிரந்தர கால்நடை பராமரிப்பு உதவியாளர், நிரந்தர கால்நடை ஆய்வாளர் இல்லாத காரணத்தால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடன் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×