என் மலர்
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அடகு வைத்திருந்திருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை மீட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மாலையில் அமர்தலிங்கம் மனைவி வேம்பு அரைஞான் கயிறு எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது சட்டை பையில் உள்ளது என கூறி உள்ளார். இதை தொடர்ந்து அவரது சட்டைபையில் பார்த்த போது அதை காணவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இதை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அவரது வீட்டின் எதிர்புறத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வேம்பு அங்கு சென்று பார்த்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் அமிர்தலிங்கம் தூக்கில் தொங்கி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அமிர்தலிங்கத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அமிர்தலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில். கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதார துறை மூலம் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.தேவூரில் உள்ள வட்டார மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் அதாவது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட்டு, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் எதுவும் இல்லை. இவ்வாது அதில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்க நாகை கியூ பிரஞ்ச் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த கண்காணிப்பையும் மீறி கஞ்சா மற்றும் தங்கம் கடத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிராஞ்ச் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன், நாகை கியூ பிரஞ்ச் இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் போலீசார் நேற்று தோப்புத்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லை. மாறாக, ஆம்புலன்சில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ்சில் வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை அயனாவரம் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 46)், மகேந்திரன்(24), வினோத்(26), சுந்தர்(36) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா பொட்டலங்களை சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட இருந்ததும் தெரிய வந்தது.
மொத்தம் 28 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா ஆம்புலன்சில் இருந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்சையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு நமது நாட்டில் ரூ.3 லட்சம் என்று தெரிவித்த போலீசார், சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், மகேந்திரன், விக்னேஷ், சுந்தர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி பருவம் தவறி கடந்த மாதம் பெய்த கனமழையினால் காலதாமதமாக கடந்த மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் காலை10 மணி வரை ஈடுபடுகின்றனர்.
இந்த ஆண்டு காலதாமதமாக உற்பத்தி துவங்கினாலும் தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகும் என உப்பு உற்பத்தியாளர் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை செம்மரக்கடை வடக்குத் தெருவை சேர்ந்தவர் தாதாஷரிப். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரிஹானாசமின் (40). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ரிஹானாசமின் வீட்டின் மேல் யாசர் அரபத் (35) என்பவர் கடந்த 2 ஆண்டு காலமாக வாடகைக்கு இருந்து வருகிறார். சம்பவத்தன்று ரிஹானாசமின் வீட்டில் தனியாக இருந்தபோது யாசர்அரபத் ரிஹானாசமினிடம் தவறாக நடக்க முற்பட்டாராம். அவர் கூச்சலிடவே குக்கரை எடுத்து ரிஹானாசமினை தலையில் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து யாசர்அரபத்தை கைது செய்தார்.
நாகப்பட்டினம:
நாகை அருகே திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைதம்பி(52). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கைலியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டடுள்ளார்.
இதுகுறித்து திருகண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி புறா கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன். இவரது மகன் அபுல்இர்சாத் (21). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபாம் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரி சென்றார். அங்கு தனது நண்பர் முகமதுபரகத் (19) என்பவரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வந்தபோது பனங்குடி அருகே கும்பகோணம் சென்ற தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் அபுல் இர்சாத் சம்பவ இடத்திலயே இறந்தார். காயமடைந்த முகம்மதுபரகத் நாகை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






