search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உப்பு உற்பத்தி
    X
    உப்பு உற்பத்தி

    வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி மும்முரம்

    வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி பருவம் தவறி கடந்த மாதம் பெய்த கனமழையினால் காலதாமதமாக கடந்த மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் காலை10 மணி வரை ஈடுபடுகின்றனர்.

    இந்த ஆண்டு காலதாமதமாக உற்பத்தி துவங்கினாலும் தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகும் என உப்பு உற்பத்தியாளர் தெரிவித்தனர்.

    Next Story
    ×