என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
நாகையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம் அருகே வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாகை நீலா தெற்கு வீதியில் கார்ப்பரேஷன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாகை நீலா தெற்கு வீதியில் கார்ப்பரேஷன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் மதுசூதனன், ஜெகன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story






