என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடியக்காட்டில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்4 March 2021 12:45 PM GMT (Updated: 4 March 2021 12:45 PM GMT)
வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு பகுதிக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களாக இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வரவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக வேதாரண்யம்- கோடியக்கரை சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X