என் மலர்
நாகப்பட்டினம்
- குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது.
- சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ. 190-க்கு ஏலம் போனது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறையில் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 58 விசைப்படகுகள் உள்ளன.கடந்த மூன்று நாட்களாக கடலின் உள்பகுதியில் சுழல் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது. இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் மத்தி மீன்களை கேரளா, சென்னை, திருச்சி ,பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். வழக்கமாக மத்தி மீன்கள் 40 முதல் 120 வரையில் விலை போகும். ஆனால் சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ.190- க்கு ஏலம் போனது. அதிக அளவில் மத்தி மீன்கள் கிடைத்தாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபடும் பணிகள் நடந்துவருகிறது.
- அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன் அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் 150 கோடியில் துண்டில் முள்வளைவு அமைக்கும் பணி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது.இப்பணிக்காக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபட்டு பணிகள் நடந்துவருகிறது இந்த நிலையில் வட மாநில லாரி பதிவு எண் கொண்ட 25 லாரிகளில் ராட்சத குழாய்கள் நேற்று நள்ளிரவு வேதாரண்யம் அடுத்த ஆதனூர் அருகே சாலை ஓரம் வரிசையாக நிறுத்தபட்டு இருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன், அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இதனால் வேதாரண்யம் பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில விவசாய சங்கத்தினர் குழாய்களை இறக்கவிடமால் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர் இந்நிலையில் உடன் வேதாரண்யம் போலீசார் மற்றும் உளவு துறை போலீசார் லாரி நின்ற இடத்திற்கு சென்று விசாரித்தனர். இந்த குழாய்கள் ஆறுகாட்டுதுறை தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணிக்கு வந்தது என உறுதிசெய்து சமூக வளைதலங்களில் பதிவிட்டனர்.
இதனால் ராட்சத குழாய் வந்ததால் இரவு 11 மணிக்கு துவங்கிய பரபரப்பு அதிகாலை 5 மணி வரை நிடித்த பி ன்அமைதி ஏற்பட்டது.
- நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர்.
- நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர். பனங்குடி கிராமத்தில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும்,
நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும், என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினார். போராட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு புதிய நில எடுப்பு 2013ம் ஆண்டு சட்டப் பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
- கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது.
- கஜா புயலில் தரைமட்டமான இருசக்கர வாகன நிறுத்தகம் இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் 2011ம் ஆண்டு பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி இப்பகுதி மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது. இந்த கல்லூரியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இக்கல்லூரி 2018ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிக்கு சுற்றுச்சுவா் கிடையாது. கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் ஜன்னல் வழியாக கல்லூரிக்குள் பாம்பு போன்ற விஷ ஐந்துக்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. கல்லூரியின் முன்புறம் உள்ள கண்ணாடிகளும் கஜா புயலில் விழுந்து அதை அப்புறப்படுத்தாமலும், புணரமைக்கலும் உள்ளது.
எந்த நேரத்திலும் அந்த கண்ணாடிகள் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் மாணவா்கள் சென்று வருகின்றனா். மாணவா்கள் வரும் இருச்சக்கர வாகன நிறுத்தகமும் கஜா புயலில் தரை மட்டமானதை இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. மாணவா்கள் வரும் வாகனங்கள் வெளியிலேயே வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
கல்லூரி நிர்வாகம் பேராசிரியா்களுக்கு ஊதியம் கொடுப்பதில் பல்கலை–க்கழகம் கொடுப்பதா? அரசு கொடுப்பதாக என்ற இழுபறியில் இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளம் கிடைக்காமல் பேராசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கல்லூரி முன்பக்கத்தில் உள்ள மேல்தளத்தில் உடைந்த கண்ணாடியும், அதை சுற்றி செடி, கொடி, மரங்கள் மண்டி உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டதற்கு பிறகு அரசு முனைந்து செயல்படுவதை விட்டு விட்டு விபத்து ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென மாணவர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- முகாமில், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
- கலைஞரின் வருமுன் காப்பீட்டு திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நாகை அடுத்த பொரவச்சேரி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பிரத்யேக மருத்துவர்களும், எலும்பு முறிவு, குழந்தைகள் மருத்துவம் போன்றவைகளுக்கு தனித்தனியே சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
மேலும், கலைஞரின் வருமுன் காப்பீட்டு திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அங்கேயே பயனாளிகள் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.
பொது சுகாதாரத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நலக் கல்வி அலுவலர் மணவாளன், வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் ஆண்டவர் செவிலியர் பயிற்சி பள்ளி நடராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுதானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சேகர் புகழேந்தி நன்றி கூறினார்.
- இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்மகும்பல் அதிகாலை வாகனத்தின் ‘சைடு லாக்கை’ உடைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளனர்.
- உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூரை சேர்ந்தவர் சத்தியசீலன். ஆட்டோ டிரைவர். இவர் தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிகாலை வாகனத்தின் 'சைடு லாக்கை'உடைத்து திருடிச்செல்ல முயன்று ள்ளனர்.
மற்றொருவர் அருகில் கிடந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் 'சைடு லாக்கை' உடைக்கும் போது சப்தம் கேட்டு அக்கம்ப க்கத்தினர் ஓடிவந்து துரத்திய போது 3 பேரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்று ள்ளனர்
இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியு ள்ள தை கொண்டு வேளாங்க ண்ணிபோலீ சில் சத்திய சீலன் புகார் அளி த்தார். அதன் பேரில் போலீசா ர்விசாரணை நடத்தி அதிரா ம்பட்டி னத்தை சேர்ந்த ஹரிஹரன், பட்டுக்கோ ட்டையை சேர்ந்த முகமது ரபிக், முத்துப்பேட்டையை சேர்ந்த பர்வீஸ் அகமது ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது.
- பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் பூவைத்தேடி காமேஸ்வரம் வேட்டைக்காரன்இருப்பு, புதுப் பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் விழுந்தமாவடி புளியமரத்தடி கடைவீதியில் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது
இந்த ஏ.டி.எம் சுமார் 3 மாத காலமாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் பணம் போடவும், எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் பணம் போடு வதற்கும், எடுப்பதற்கும் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வங்கி நிர்வாகம் உடனடியாக ஏ.டி.எம்-யை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
- இறந்தவர்கள் உடலை தூக்கிக் கொண்டு இச்சாலையில் செல்ல முடியாமல், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்–கரையிருப்பு-புறாக்கிராமம் இடையே மண் சாலை அமைந்துள்ளது. கீழக்–கரையிருப்பு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அன்றாடம் இச்சாலை வழியேதான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலை முழுவதுமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் இச்சாலை வழியே செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இக்கிரா–மத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய உடலை தூக்கிக் கொண்டு சேறும் சகதியுமான இச்சாலையில் செல்ல முடியாமலும், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமாகி கிடக்கும் இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை சீரமைத்து தரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன் இந்த சாலையை சீரமைத்துத்தர அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
- பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பனங்குடியில் செல்வமகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 28-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து 2-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. 3-ம் தேதி பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக் காப்பு, உதிர்வாய் துடைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
- அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.
- முதலிடம் பிடித்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கௌசிகா, இராண்டாமிடம் பிடித்த ஹரிணி ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
வேதாரண்யம் :
வேதாரண்யம்அடுத்த ஆயக்காரன்புலம் பெ ண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்சென்னை மாமல்லபுரத்தில் நடை பெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைபள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் கெளசிகா, ஹரிணி சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவி கெளசிகாவை தமிழக அரசு சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் இலவசமாக அழைத்து சென்று மீண்டும் சென்னை போட்டியில் பங்குபெறச் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததனர்.
இதில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் 19 வயதுக்கு ட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள்மேல்நி லைப்பள்ளி மாணவி கௌசிகா இராண்டாம் இடம்பெற்ற ஹரிணி ஆகியோ ருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது .பள்ளி தலைமை ஆசிய ர்ஸ்டெல்லாஜேனட் தலை மையில் நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு சால்வை, திருக்குறள் நூல்பரிசளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை யாசிரியர் பரஞ்ஜோதி, ஆசிரியர் சிலம்புசெல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் பொற்றோர்கள் கலந்துகொண்டனர்.
- செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது.
- உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வர்த்தக சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேதாரண்யம் வர்த்தக சங்கம் இணைந்து செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கக் கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் சுபஹானி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் வேதநாயகம் வாழ்த்துரை வழங்கினார். நாகை மாவட்ட நியமன அலுவலா் டாக்டர் புஷ்பராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் எப்.எஸ்.எஸ்.ஐ டெக்னிக்கல் ஆலோசகர் செய்யது அகமது, உணவுபாதுகா ப்பு ஆலோசகர் ஜெகதீ ஸ்வரி ஆகியோர் விளக்க வுரையாற்றினர். ஜி.டி.பி அலுவலா் சித்ரா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.
மேலும் கூட்டத்தில் வர்த்தக சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் தங்கதுரை, தமிழழகன் உட்பட செயற்குழுஉறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளா் சீனி வாசன் நன்றி கூறினார்.
- ஆடி மாதம் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், சந்தனம், திருநீறு உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவாடி பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






