search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black stones"

    • திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுர ஆதினத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி தேவதானத்தை சேர்ந்த குமரக்கோவில் பிடாரிவடக்கு வீதியில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1986ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் நடைபெ ற்றது.

    அதன்பிறகு இக்கோ யிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதினம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதனிடையே திருப்ப ணிகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோயில் விமானகலச பணிகள், மூலவர் சந்நிதி பணிகள், வெளிமண்டபம் பணிகள், கருங்கற்கள் பிரகார பதிப்பு பணிகள், முகபு மண்டபம் திருப்பணிகள் ஆகியவற்றையும், வர்ணபூச்சு பணிகளையும் தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.

    கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தையும் பார்வை யிட்டார்.

    அப்போது சட்டைநாதர் கோயில் கணக்கர் செந்தில், தமிழக கோயில் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் பந்தல்.முத்து, தி.மு.க. நிர்வாகி பாபு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபடும் பணிகள் நடந்துவருகிறது.
    • அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன் அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் 150 கோடியில் துண்டில் முள்வளைவு அமைக்கும் பணி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது.இப்பணிக்காக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபட்டு பணிகள் நடந்துவருகிறது இந்த நிலையில் வட மாநில லாரி பதிவு எண் கொண்ட 25 லாரிகளில் ராட்சத குழாய்கள் நேற்று நள்ளிரவு வேதாரண்யம் அடுத்த ஆதனூர் அருகே சாலை ஓரம் வரிசையாக நிறுத்தபட்டு இருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன், அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இதனால் வேதாரண்யம் பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில விவசாய சங்கத்தினர் குழாய்களை இறக்கவிடமால் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர் இந்நிலையில் உடன் வேதாரண்யம் போலீசார் மற்றும் உளவு துறை போலீசார் லாரி நின்ற இடத்திற்கு சென்று விசாரித்தனர். இந்த குழாய்கள் ஆறுகாட்டுதுறை தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணிக்கு வந்தது என உறுதிசெய்து சமூக வளைதலங்களில் பதிவிட்டனர்.

    இதனால் ராட்சத குழாய் வந்ததால் இரவு 11 மணிக்கு துவங்கிய பரபரப்பு அதிகாலை 5 மணி வரை நிடித்த பி ன்அமைதி ஏற்பட்டது.

    ×