search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் வந்த ராட்சத குழாய்களால் பரபரப்பு
    X

    லாரிகளில் இருந்த ராட்சத குழாய்கள்.

    லாரியில் வந்த ராட்சத குழாய்களால் பரபரப்பு

    • நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபடும் பணிகள் நடந்துவருகிறது.
    • அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன் அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்தில் 150 கோடியில் துண்டில் முள்வளைவு அமைக்கும் பணி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது.இப்பணிக்காக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டபட்டு பணிகள் நடந்துவருகிறது இந்த நிலையில் வட மாநில லாரி பதிவு எண் கொண்ட 25 லாரிகளில் ராட்சத குழாய்கள் நேற்று நள்ளிரவு வேதாரண்யம் அடுத்த ஆதனூர் அருகே சாலை ஓரம் வரிசையாக நிறுத்தபட்டு இருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன், அல்லது ஓ.என்.ஜீ.சி பணிக்கு வந்தாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இதனால் வேதாரண்யம் பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில விவசாய சங்கத்தினர் குழாய்களை இறக்கவிடமால் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர் இந்நிலையில் உடன் வேதாரண்யம் போலீசார் மற்றும் உளவு துறை போலீசார் லாரி நின்ற இடத்திற்கு சென்று விசாரித்தனர். இந்த குழாய்கள் ஆறுகாட்டுதுறை தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணிக்கு வந்தது என உறுதிசெய்து சமூக வளைதலங்களில் பதிவிட்டனர்.

    இதனால் ராட்சத குழாய் வந்ததால் இரவு 11 மணிக்கு துவங்கிய பரபரப்பு அதிகாலை 5 மணி வரை நிடித்த பி ன்அமைதி ஏற்பட்டது.

    Next Story
    ×