search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    சிறப்பு மருத்துவ முகாம்

    • முகாமில், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
    • கலைஞரின் வருமுன் காப்பீட்டு திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நாகை அடுத்த பொரவச்சேரி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பிரத்யேக மருத்துவர்களும், எலும்பு முறிவு, குழந்தைகள் மருத்துவம் போன்றவைகளுக்கு தனித்தனியே சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

    மேலும், கலைஞரின் வருமுன் காப்பீட்டு திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அங்கேயே பயனாளிகள் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

    பொது சுகாதாரத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நலக் கல்வி அலுவலர் மணவாளன், வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    இதில் ஆண்டவர் செவிலியர் பயிற்சி பள்ளி நடராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுதானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சேகர் புகழேந்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×