search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதிதாசன் உறுப்பு கல்லூரியை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை
    X

    பாரதிதாசன் உறுப்பு கல்லூரியை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

    • கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது.
    • கஜா புயலில் தரைமட்டமான இருசக்கர வாகன நிறுத்தகம் இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 2011ம் ஆண்டு பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி இப்பகுதி மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது. இந்த கல்லூரியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

    இக்கல்லூரி 2018ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிக்கு சுற்றுச்சுவா் கிடையாது. கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் ஜன்னல் வழியாக கல்லூரிக்குள் பாம்பு போன்ற விஷ ஐந்துக்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. கல்லூரியின் முன்புறம் உள்ள கண்ணாடிகளும் கஜா புயலில் விழுந்து அதை அப்புறப்படுத்தாமலும், புணரமைக்கலும் உள்ளது.

    எந்த நேரத்திலும் அந்த கண்ணாடிகள் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் மாணவா்கள் சென்று வருகின்றனா். மாணவா்கள் வரும் இருச்சக்கர வாகன நிறுத்தகமும் கஜா புயலில் தரை மட்டமானதை இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. மாணவா்கள் வரும் வாகனங்கள் வெளியிலேயே வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    கல்லூரி நிர்வாகம் பேராசிரியா்களுக்கு ஊதியம் கொடுப்பதில் பல்கலை–க்கழகம் கொடுப்பதா? அரசு கொடுப்பதாக என்ற இழுபறியில் இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளம் கிடைக்காமல் பேராசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கல்லூரி முன்பக்கத்தில் உள்ள மேல்தளத்தில் உடைந்த கண்ணாடியும், அதை சுற்றி செடி, கொடி, மரங்கள் மண்டி உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டதற்கு பிறகு அரசு முனைந்து செயல்படுவதை விட்டு விட்டு விபத்து ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென மாணவர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×