search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lamp Pujas"

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
    • பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பனங்குடியில் செல்வமகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 28-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து 2-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. 3-ம் தேதி பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக் காப்பு, உதிர்வாய் துடைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

    ×