என் மலர்
நாகப்பட்டினம்
- 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
- இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.
சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு ஆகும்.
மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.
இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
இந்த ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த "ஹிமாலய கிரிபன் கழுகு" மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளது.
தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால் இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது.
இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் ஆமூர் பால்கன் இனம், சைப்பிரியாவை கடந்து நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரும்.
இங்கு ஓய்வு எடுக்கும் இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள் தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன.
கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் 1 லட்சம் பறவைகளுக்கு மேல் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்திலேயே இதுவரை 1 லட்சத்திற்கு மேல் பறவைகள் வந்துள்ளன.
இதுகுறித்து கோடியக்கரை வனசரக்கர் அயூப்கான் கூறியதாவது:-
கோடியக்கரை பறவைகள் சரணலாயத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை சுற்றுலா பயணிகள் காணலாம்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாகுலார், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது என்றார்.
- திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
- இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் உருவான "மாமனிதன் வைகோ" ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது:-
வைகோ பற்றிய ஆவணப்பட த்தை துரை வைகோ சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை.
அவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும்.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
அது தவறான கருத்து என்பதற்கு வைகோவின் வாழ்க்கையே சான்று.
அவர் திராவிட இயக்கவாதியாகவும் தமிழ் தேசியவாதியாகவும் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார். வைகோவின் போராட்டம் முடிந்துவிடவில்லை.
இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை. சமூக நீதியை காப்பாற்ற வைகோ தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ, நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், ம.தி.மு.க. நாகை மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், நாகை மாலி எம்.எல்.ஏ, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வி.சி.க. மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
- தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 20 வயதான மகள் சத்யபிரியாயை சதீஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நின்ற மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட சதீஷ் அப்போது வந்த மின்சார ரயிலில் மாணவியை தள்ளி கொலை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை அதிர்ச்சியில் மனமுடைந்து தற்ெகாலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவினால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
எனவே இனியாவது தமிழக அரசும், காவல்துறையும் மிக தீவிர நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவிகள், அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
- ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
அதனால் பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்.
- மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு ஏதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் குளங்கள் புனரமைப்பு பணிகள் நடந்துவருகிறது.
வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள், சிறுதலை காடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு எதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு உட்பட ரூ.1.25 கோடி செலவிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ, ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், அருள்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
- ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
- முருகப்பெருமானுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இம்மாத புரட்டாசி கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு வீதியுலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வசந்த
மண்டபத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மேளதாளத்துடன் வீதியுலாவிற்கு புறப்பாடான முருகப்பெருமானை திரளான பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து முருக பெருமானை வழிபாடு செய்தனர்.
- வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்கப்பட்டது.
- மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஒப்படைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, நாகூர், கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுப்போன மற்றும் தொலைந்துப் போன கைப்பேசிகளை கண்டுப்பிடித்து தருமாறு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நாகை மாவட்ட சைபர் க்ரைம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலிசார் விசாரணை நடத்தி தொலைந்து போன மற்றும் திருடுப்போன 8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 75 கைப்பேசிகளை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவர்களிடம் நேற்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஒப்படைத்தார்.
- நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், 179 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் குடைகளை வழங்கினர்.
மழைக்காலம் என்பதால் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தங்களுடைய சொந்த செலவில் குடைகள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
- மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.
- எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறது.
வேதாரண்யம் அக்12-
வேதாரண்யம் தாலுகா விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்
நாள்தோறும் பைபர் படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.
இந்த உயர்கோபுர மின்விளக்கால் கடற்கரை முழுவதும் இருள் இல்லமால் மீனவர்களுமிகுந்த பயனுள்ளதாக இருந்தது மேலும் இந்த மின்கோபுர விளக்கின் வெளிச்சத்தை அடையாளம் வைத்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கரை திரும்பினர் இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில்இந்த மின் கோபுர விளக்கு முறிந்து விழுந்தது
கடந்த நான்கு ஆண்டுகளாக விழுந்த மின்கம்பத்தை சீர் செய்து புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் பல்வேறு முறை கோரிக்கை வைத்தனர்.
ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறதுஉடனடியாக இந்த மின் கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என கிராம பஞ்சாயத்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரு மாட்டிற்கு ரூ.1000 அபராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்து இருந்தார்.
- மாட்டின் உரிமையாளர்கள் கடைவீதியில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிகாலை 1 மணிக்கு பிடிக்க ஆரம்பித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பகுதிகள்மற்றும் கடைவீதிகளில் சுற்றிததிரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் 11ந் தேதிக்குள் பிடித்து கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் மாடுகள் பிடிக்கப்பட்ட கால்நடை பட்டிகளில் அடைக்கப்படும்.
அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு ரூ.1000 அபராதமும், பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று வரை மாட்டின் உரிமையாளர்கள் கடைவீதியில் சுற்றித் திரிந்த மாடுகளை அதிகாலை 1 மணிக்கு பிடிக்க ஆரம்பித்தனர். நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகராட்சி பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாடுகளை பிடித்தனர். நகராட்சி மூலம் பிடிக்கப்பட்ட மாட்டிற்கு 1000 ரூபாய் விதம் அபராதம் பாரமரிப்பு செலவும் வசூலிக்கபடும் எனவும் தொடர்ந்து மாடுகள் பிடிக்கபடும் என நகராட்சி ஆணையர்ஹேமலதா தெரிவித்தார்.
- முன்பு கிலோ 700 ரூபாய்க்கு விலை போன நீலக்கால் நண்டு தற்போது 300 ருபாய்க்கு விலை போகிறது.
- நாள் ஒன்றுக்கு 2 டன் முதல் 5 டன் வரை மீன்கள் இறால், நண்டு கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கிய நிலையில் நாகை, தஞ்சை , காரைக்கால் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சை உட்பட பல்வேறு மாவட்ட மீனவர்கள் வரும் மார்ச் மாதம் வரையுள்ள சீசனை யொட்டி தொழில் செய்ய படகுகள் மற்றும் குடும்பத்துடன் வரத்தொடங்கியுள்ளனர்.
தற்போது வெளியூர் மீனவர்களுடன் உள்ளுர் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடி தொழிலுக்கு செல்கின்றனர். மீனவர்கள் வலைகளில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் மட்லீஸ்மீன் காலா, ஷீலா, வாவல், திருக்கை, மற்றும் சிறிய வகை மீன்களான தோளி, வெள்ளம் தோகை பொடி, பன்னாஉட்பட பல்வேறு வகை மீன்களுடன் வகை வகையான நீலக்கால்நண்டு, புள்ளிநண்டு, கல்நண்டு, சிலுவை நண்டு மற்றும் இறால் வகைகள் கிடைக்கிறது.
நாள் ஒன்றுக்கு 2 டன் முதல் 5 டன் வரை மீன்கள் இறால், நண்டு கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அதிக அளவில் நீலக்கால் நண்டு கிடைப்பதால் அந்த நண்டுகள் கோடியக்கரை கடல் பகுதியிலேயே வைத்து அவிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஐஸ்கீரிம் செய்ய அனுப்பி வைக்கபடுகிறதுஇது குறித்து கோடியக்கரை மீனவ நல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேல் கூறியதாவது,
தற்போது நீலக்கால் நண்டு அதிக அளவில் கிடைப்பதால் அதை கடற்கரையிலேயே அவித்து் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கபடுகிறது. வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டத்திற்கும் நீலக்கால் நண்டு அனுப்பிவைத்தாலும் சரியான விலை கிடைக்கவில்லை.
முன்பு கிலோ 700 ரூபாய்க்கு விலை போன நீலக்கால் நண்டு தற்போது 300 ருபாய்க்கு விலை போகிறது. இதற்கு காரணம் கோடியக்கரையில் கிடைக்கும் நீலக்கால் நண்டு தற்போது இந்தோனேசியா நாட்டிலும் அதிக அளவில் கிடைக்கிறது.
இங்கு விற்பனையாவதை விட இந்தோனேசியாவில் பல மடங்கு விலை குறைவாக உள்ளதால் அங்கிருந்து பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தற்போது இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீலக்கால் நண்டு கிலோ ரூ. 750 விற்ற நிலையில் தற்போது கிலோ 350- க்கு் விலை போகிறது.
இதனால் அதிகப்படியான நண்டுகள் கிடைத்தாலும் விலை கிடைக்காததால் மீனவர்கள் நண்டு பிடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இந்த விலை வீழ்ச்சி ஓரிரு மாதத்தில் சரியாகும் என தெரிவித்தார்.கோடியக்கரையில் வலைகளில் அதிகளவில் சிக்கும் நீலக்கால், புள்ளி நண்டுகள்
- பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.
- உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.
கல்வி குழும தலைவர் ஜோதிமணி அம்மாள் தொடங்கி வைத்தார். கல்வி குழும செயலர் செந்தில்குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
கல்வி குழும செயல் அலுவலர் சந்திரசேகர், கல்விசார் இயக்குனர் மோகன், கல்லூரி முதல்வர்கள் நடராஜன், முகமது இஸ்மாயில், துணை முதல்வர்கள் கலியபெருமாள், ராஜா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.
பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.
நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உயிர் வேதியியல் துறை தலைவர் உமா வரவேற்றார். துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உயிர் வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.






