search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.8 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
    X

    மீட்கப்பட்ட செல்போன்கள்.

    ரூ.8 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

    • வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்கப்பட்டது.
    • மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஒப்படைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, நாகூர், கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுப்போன மற்றும் தொலைந்துப் போன கைப்பேசிகளை கண்டுப்பிடித்து தருமாறு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நாகை மாவட்ட சைபர் க்ரைம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலிசார் விசாரணை நடத்தி தொலைந்து போன மற்றும் திருடுப்போன 8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 75 கைப்பேசிகளை மீட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவர்களிடம் நேற்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஒப்படைத்தார்.

    Next Story
    ×