என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆறு.சரவணத் தேவர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- முக்குலத்து புலிகள் கட்சி
- பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
- தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 20 வயதான மகள் சத்யபிரியாயை சதீஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நின்ற மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட சதீஷ் அப்போது வந்த மின்சார ரயிலில் மாணவியை தள்ளி கொலை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை அதிர்ச்சியில் மனமுடைந்து தற்ெகாலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவினால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
எனவே இனியாவது தமிழக அரசும், காவல்துறையும் மிக தீவிர நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவிகள், அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.