என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • பரிமளரெங்கநாதர் கோயில், பெருந்திருவிழா 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருளினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும்.

    இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.

    9-ஆம் திருநாளின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

    பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோயில் செயல் அலுவலர் ரம்யா, காவல் ஆய்வாளர் செல்வம், நகராட்சி தலைவர் குண்டாமணி, வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, பரிமள ரெங்கா என்ற பக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் மேற்கொண்டனர்.

    தேர் நான்கு வீதிகளைச் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் மோகனசுந்தரம், அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் சிவகுமார், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி லயன்ஸ் சங்கம், கொள்ளிடம் லயன்ஸ்சங்கம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வ ரன்கோயில், திருவெண்காடு லயன்ஸ் சங்கங்கள், வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி சண்முகவேல் தலைமை வகித்தார்.

    சீர்காழி சங்கத்தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சக்திவீரன் நன்றிக்கூறினார்.

    • இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
    • குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டுவரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது. இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது.

    இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர். இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர். இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் லாரி ஓட்டுநர்கள் சென்று விடும் நிலையில் அப்பகுதி மக்களே மண்ணை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.

    இதனால் நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண் சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் சிதறிய மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சீர்காழி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.
    • வடரெங்கம் வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வடரெங்கத்திற்கு 2 நகர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.இதனிடையே பள்ளி நேரங்களில் பேருந்துகளில் அதிகளவு பயணிகள், மாணவர்கள் பயணம் செய்யும் நிலையால் மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சீர்காழி கிளை மேலாளர் வடிவேல் உத்தரவின்படி வடரெங்கம் கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுபேருந்து இயக்கப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் செல்லும் மாற்று பேருந்துகளை வடரெங்கம் வழிதடத்தில் இயக்கி மாணவ -மாணவிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதுள்ளது.

    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெருமாள்- தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும்.

    இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் திருநாளின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான பரிமளரெங்கநாதர் பெருமாள், சுகந்தவனநாயகி தாயார் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

    பெருமாள் தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல், சிறப்பும் பூரணாகுதி திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பெருமாள் தாயார் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக செயலர் ரம்யா, அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் குமார், மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

    • கோவிலிருந்து மார்க்கசகாயசாமி சவுந்தரநாயகி அம்பாளுடன் தேரில் புறப்பட்டது.
    • பக்தர்கள் வழிநெடுகிலும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    9-ம் திருநாளின் முக்கிய விழா வான தேரோட்டம் நேற்று கோயில் நிர்வாக செயல் அலுவலர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    கோவிலிருந்து மார்க்கசகாய சுவாமி சௌந்தரநாயகி அம்பாளுடன் தேரில் புறப்பட்டது.

    பின்னர் நான்கு வீதிகளில் வீதி உலா வந்தது.

    இந்த தேர் திருவிழாவில் தக்கார் சதிஷ், உபயதாரர்கள், கிராமவாசிகள், அனைத்து வழிப்பாட்டு மன்றத்தினர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.
    • மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

    மகா பூர்ணாகுதியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில், மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிவ பாடகசாலை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் ஆன்மீக பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
    • தள்ளுபடி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பரதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.

    அப்போது எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும், தள்ளுபடி தொகையினை வட்டியுடன் வழங்கிட வேண்டும், நகை கடன் ஏலத்தில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களை பழி வாங்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கோபிநாதன், இணை செயலாளர்கள் அரபுபுனிசாபேகம், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.

    • தற்போது 2.57 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • விரைவில் ரூ. 23.60 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா தளம் ரூபாய் 2.57 கோடி செலவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணி களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் உலக சுற்றுலா தளத்திற்கு இணையாக பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஆணையிட்டு உள்ளார்கள். அதன்படி பூம்புகார் சுற்றுலா தளம் தற்போது 2.57 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதன் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.

    சிலப்பதிகார கலைக்கூடம், தகவல் விளக்க கூடம், உணவகம், கடைகள், இலஞ்சி மன்றம் மேம்பாடு, குடிநீர் தொட்டி, போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் மிக விரைவில் ரூபாய். 23 . 60 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    டெண்டர் விடப்பட்டுள்ளது முதற்கட்ட பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும்.

    உலகிலேயே முன்னோடி சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் மீனவர் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

    • ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாக கட்டிடம் அமைய உள்ளது.
    • நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வார திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உட்புற நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கான கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமை டாக்டர் அருண் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சீர்காழி நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொறியாளர் சித்ரா அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தி னராக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்:-

    விரைவில் சீர்காழி ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாக கட்டிடம் அமைய உள்ளது.

    அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில் டாக்டர் மருதவாணன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒப்பந்தக்காரர் அன்பழகன் நன்றி கூறினார்.

    • பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், வாயில் அலகு குத்தியும் மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.
    • கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் கீழ்மாத்தூர் ஊராட்சியில் தருமபுரம் ஆதீனம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஒட்டங்காட்டில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தி மேளதாளங்கள் முழங்க வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.

    பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தீக்குண்டத்தில் இறங்கினர்.

    தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    திருக்கடையூர் கோவில் நிர்வாகிகள் தீமிதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் விஜேந்திரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துக் கொன்டனர்.

    இதேபோல் இலுப்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் 23- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

    • மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
    • பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பொறியாளர் சனல்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

    ஜெயலட்சுமி:

    அறுபத்தி மூவர் பேட்டை பகுதியில் பாதாளசாக்கடை மேனுவல் திரம்பியதால் வீடுகளில் கழிவுநீர் எதிர்க்கிறது.

    பாதாளசாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

    விஜய்:

    மினிபவர் டேங்க் பழுதுநீக்க கூறினால் ஒப்பந்தகாரரர் ஏற்கனவே செய்ததற்கு பணம் வரவில்லை என்கிறார். பழுதடைந்ததை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சதீஷ்:

    மாயூரநாதர் கீழவீதி பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்துகொடுக்க வேண்டும்.

    ரமேஷ்:

    வடக்குராமலி ங்கத்தெரு சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

    காவிரி நடைபாலத்தில் கைப்பிடி சுவர் சேதமடைந்துள்ளதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    கணேசன்:

    திருவிழந்துார் பெருமாள் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

    அதன்அருகே உள்ள மினி பவர்டேங்க் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் வசதி இன்றி உள்ளது அதனை சீரமைக்க வேண்டும்.

    சர்வோதயன்:

    ஸ்டேட்பாங்க் ரோடு, டவுன்க்ஸ்டன்ஷன், பஜனமடைத்தெரு பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்து மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    ரத்தின வேல்:

    சனிக்கிழமை நகராட்சி 36 வார்டுகளிலும் மாஸ்கிளீனிங் என்று துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது.

    சம்பத்:

    ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் 11 மினிபவர் டேங்குகள் உள்ளது.

    அனைத்தும் பழு தாகி உள்ளதால் அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

    ஜெயந்தி:

    பழுதடைந்ததாக கூறி 2 மினிபவர்டேங்க் மோட்டார்கள் கழற்றி சென்று ஒரு வருடத்திற்குமேலாகியும் அதனை சீர்செய்து பயன்பாட்டிற்கு விடவில்லை.

    கல்யாணி:

    ஆனந்ததாண்டவபுரம் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் குளம்போன்று தேங்கிநின்று அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

    கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டது.

    முடிவில் துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    ×