என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They Pulled The Chariot Rope"

    • பரிமளரெங்கநாதர் கோயில், பெருந்திருவிழா 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருளினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும்.

    இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.

    9-ஆம் திருநாளின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

    பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோயில் செயல் அலுவலர் ரம்யா, காவல் ஆய்வாளர் செல்வம், நகராட்சி தலைவர் குண்டாமணி, வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, பரிமள ரெங்கா என்ற பக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் மேற்கொண்டனர்.

    தேர் நான்கு வீதிகளைச் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் மோகனசுந்தரம், அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் சிவகுமார், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×