என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
    • கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார்.

    இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்று கொண்டிருந்த இவருக்கு சொந்தமான பசுமாடு நடந்து செல்லும் போது கொல்லைபுர த்திலிருந்த பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அதனை மீட்க முயற்சித்த நிலையில் பசு மாட்டை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆழமான பாழும் கிணற்றில் இறங்கி இரண்டு மணி நேரம் போராடி சாதுர்யமாக பசு மாட்டை பாதுகாப்பாக மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டுக் கொடுத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுதலை தெரிவித்தனர்.

    • அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
    • 4 வீதிகளை சுற்றுவந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுகா, நீடூர் சோமநாதர் சுவாமி கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்பாள் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து 27-ஆம் தேதி காப்பு கட்டுதல், மே 2-ஆம் தேதி பால்குடம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது.

    உற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்ப ட்டார்.

    பின்னர், மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர் தேரை இழுத்தனர்.

    முஸ்லிம், கிரிஸ்டன், இந்து வசிக்கும் கோயிலின் நான்கு வீதிகளைச் சுற்றுவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டின் முன்பு அம்பாளுக்கு மலர் சாற்றி, தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

    இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்விழா நிகழ்ச்சி ஏற்பாடு களை நீடூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்

    • கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது.
    • நவதானியங்களை கோபுர கலசத்தில் இட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர்க்கு, உமையம்மை ஞானபால் வழங்கிய இத்தலத்தில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவிலில் உள்ள நான்கு கோபுரங்கள், பிரகாரங்கள், அனைத்து சுவாமி சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும் கருங்கல் சன்னதி மற்றும் கருங்கல் பிரகாரம் அமைக்கப்பட்டும் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிறது.

    இக்கோவிலில் உள்ள ருணம் தீர்த்த விநாயகர் விமானத்தில் தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருகரத்தால் கோபுர கலசம் வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுர திருப்பணி உபயதாரர் மார்கோனி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்தர்கள் நவதானியங்க ள்கோபுர கலசத்தில் இட்டு கலசத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் கோபுர கலசங்கள் கிழக்கு ராஜகோபுரத்தில் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது.
    • சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 40). இவர்மீது பல கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான இவர் நேற்று இரவு அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    திருவாரூரில் இருந்து முகில் என்ற மோப்ப நாயும் நாகப்பட்டினத்தில் இருந்து அகிலா என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • சட்டநாதர் சுவாமி கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
    • வடக்குகோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது.

    இதற்கான திருப்பணிகள் தொடங்கி தற்போது நிறைவ டைந்துவருகிறது.

    இதனிடையே சட்டநாதர் சுவாமி கோயில் வடக்கு கோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலர் இப்பணியில் ஈடுப்பட்டனர்.

    அங்கிருந்த தேங்காய் மட்டைகள், குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.

    மேலும் கும்பாபிஷேத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் வரயிருப்பதால் வடக்கு கோபுர வாசல் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தூய்மை பணிகள் நடைபெறுவதை நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வரி, ஆணையர் வாசுதேவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உஷாபொன்னி வளவன் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார்.

    இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    ஊராட்சி செயலர் சத்தியா, ரேசன் கடை ஊழியர் ஜெகதீஸ், தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மயிலாடுதுறை:

    திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பஸ் அதிவேமாக மோதி எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

    இவ்விபத்தில் அரசு பஸ் நடத்துனர் விஜயசாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த ஓதுவார்கள் பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பஸ்சில் பயணித்த 26 பேர் படுகாயம் அடைந்து சீர்காழி மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பாவையிட்டு ஆய்வு செய்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தி.மு.க மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் சீர்காழி அரசு மருத்து வமனை சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளியும் சந்தித்து நலம் விசாரித்தனர். 

    • திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
    • 16அடி நீளம் அலகு குத்தி பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோவிலின் 61-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10-ஆம் நாள் திருவிழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது. 16 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன.

    அங்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் குண்டாமணி, விழா குழுவினர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.
    • சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் என்ற ஊரில் பழவாற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.

    சிறிய பாலமாக இருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு சுமார் ரூ. 6 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

    இதற்காக பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதன் வழியே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் சென்று வந்தன.

    நமச்சிவாயபுரம் கல்யாண சோழபுரம், கடலங்குடி, பூதங்குடி, உத்தரங்குடி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை மற்றும் திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.

    இந்த தண்ணீர் அனைத்தும் தேனூர் கதவனை வழியே கடலுக்குள் திருப்பி விடப்படும்.

    தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளுக்காக தேனூர் கதவனை மூடப்பட்டதால் தண்ணீர் தேங்கி தற்காலிக பாலத்தை தண்ணீர் மெல்ல மெல்ல சுழ்ந்து வருகிறது.

    இதனால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பாலம் கட்டுமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக கதவணையைத் திறந்து தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விரைந்து பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
    • இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது.

    ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி, தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்.

    ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு சேந்தங்குடி வள்ளலார் கோயில் நிர்வாகிகள் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ய ப்பட்டது.

    இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.
    • 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்ட ளை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

    ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு 108 சங்குகள் மற்றும் 108 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றது.

    மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைக்கு பிறகு சங்குகள் மற்றும் கலசங்கள் அடங்கிய புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுப்பிரமணியசாமி மற்றும் வள்ளி தேவசேனாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    TNJ0112052023: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஒரு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். பஸ்சை பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 38) என்பவர் ஒட்டி சென்றார்.திருவண்ணாமலையை சேர்ந்த விஜயசாரதி நட

    சீர்காழி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஒரு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 43 பயணிகள் இருந்தனர். பஸ்சை பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். திருவண்ணாமலையை சேர்ந்த விஜயசாரதி நடத்துனராக பணியாற்றினார்.

    அந்த பஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை சாலையோரம் கொண்டு சென்றுள்ளார்.

    அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அரசு பஸ் அதிவேமாக மோதி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பஸ்சில் இருந்த நடத்துனர் விஜயசாரதி உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 26 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாரதி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் சிதம்பரம் எம்.கே.தோட்டம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 39), கடலூர் சேத்தியாதோப்பு வெய்யலூரை சேர்ந்த பத்மநாபன் (35), அருள் ராஜ் (16) என்பது தெரியவந்தது. இதில் பத்மநாபன், அருள்ராஜ் தந்தை-மகன். இவர்கள் அனைவரும் கோவிலில் கச்சேரி நிகழ்ச்சி செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து குருடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுச்சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ×