search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 people died"

    • . மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது.

    தெற்கு சீனாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் 60.9 செ.மீ மழை பெய்துள்ளது.

    குவாங்டாங்கின் ஷென்சென் மெகாசிட்டி பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.




    ஷாவோகிங் நகரில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் 2 நகரங்கள் தொடர் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான கடை வீதிகள் , குடியிருப்பு பகுதிகள் மூழ்கின. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தில் 1,500 ஹெக்டேர் விளைநில பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில கிராமங்களில் நெல் மற்றும் உருளைக்கிழங்கு வயல்கள் மூழ்கின. பல இடங்களில் 2 வது மாடி வீடுகள் வரை மழை நீர் சூழ்ந்துள்ளது.




    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது. மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    புவி வெப்பமடைதல் காரணமாக சீனாவில் வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

    • சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மயிலாடுதுறை:

    திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பஸ் அதிவேமாக மோதி எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

    இவ்விபத்தில் அரசு பஸ் நடத்துனர் விஜயசாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த ஓதுவார்கள் பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பஸ்சில் பயணித்த 26 பேர் படுகாயம் அடைந்து சீர்காழி மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பாவையிட்டு ஆய்வு செய்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தி.மு.க மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் சீர்காழி அரசு மருத்து வமனை சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளியும் சந்தித்து நலம் விசாரித்தனர். 

    • மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற தங்கவேல் மற்றும் பழனிசாமி மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). தொழிலாளி. இவர் பழனிசாமி என்பவருடன் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற தங்கவேல் மற்றும் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர். அவர்களை வீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தங்கவேலை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரித்தார்.பழனிசாமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). இவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அவர் அன்னூர்-கருமத்தம்பட்டி ரோட்டில் நடந்து வந்தார். அப்போது அங்கு சாலையை கடக்க முயற்சி செய்த போது அந்த வழியாக வந்த மினி லாரி மோதி தூக்கி வீசப்பட்டார்.

    அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரித்தார்.இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோ ன்று போத்தனூர் சேர்ந்த வில்லியம் (63)என்பவர் நரசிம்ம நாயக்கன் பாளையம்- பெரியநாயக்கன் பாளையம் ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார். பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரை சேர்ந்தவர் விக்ரம் (22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் செந்தில் குமார் என்பவருடன் அன்னூரில் இருந்து சிறுமுகை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் விக்ரம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செந்தில் குமார் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஒேர நாளில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×