என் மலர்
நீங்கள் தேடியது "அம்மன் வீதியுலா"
- திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
- 16அடி நீளம் அலகு குத்தி பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோவிலின் 61-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10-ஆம் நாள் திருவிழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது. 16 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன.
அங்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் குண்டாமணி, விழா குழுவினர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- சமயபுரத்திலிருந்து மாரியம்மன் மல்லிகைப்பூவும் கைவளையலுக்கும் ஆசைப்பட்டு, ஆண்டுக்கு 15 தினங்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.
- 15 ஆம் தேதி சிறிய தேரில் அம்மன் வீதியுலாவாக வந்து பின்னர் சமயபுரம் எழுந்தருளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில், சமயபுரத்திலிருந்து மாரி யம்மன் மல்லிகைப்பூவும் கைவளையலுக்கும் ஆசைப்பட்டு, ஆண்டுக்கு 15 தினங்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.
வைகாசி ஆண்டு திருவிழாவினையொட்டி அரசலாற்றில் இருந்து செப்புக் குடத்தில் வைத்து கரகம் எடுத்து வந்து அதன் மீது நாணல் கொண்டு திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில் வைத்து ஆகாச மாரியம்மனாக அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில் அம்மனை எழுந்தருளச் செய்து நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, திருநறையூர் மற்றும் நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, புஷ்ப பல்லக்கில் இருந்து ஆகாச மாரியம்மனை, நாதஸ்வர மேள தாளம் முழங்க, ஏராளமான பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆடி அசைந்து ஆலயத்திற்கு தூக்கி வரும் பொழுது, இருபுறமும் வெண் சாமரம் வீச, நூற்றுக்கணக்கான கண்ணாடிகள் கைவளையல் அடங்கி கொத்தை முன்னெடுத்து வரவேற்று செல்ல, தொடர்ந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மல்லிகையை பிரதானமாக கொண்டு, பலவிதமான நறுமண பூக்களை தூவி பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க, வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகிற 12-ஆம் தேதி பெரிய திருவிழாவும் அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி சிறிய தேரில் அம்மன் வீதியுலாவாக வந்து பின்னர் சமயபுரம் எழுந்தருளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.






