என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேனி பெட்டிகள்.
    • ரூ.4 ஆயிரம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை வட்டாரத்தை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 2 தேனி பெட்டிகள் வீதம் தலா ரூ.4 ஆயிரம் மதிப்பில் (ரூ.3 ஆயிரத்து 200) மானியத்துடன் கூடிய தேனி பெட்டிகளை விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    அருகில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன் ஆகியோர் உள்ளனர்.

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • நூற்றுக்கணக்கான அடியார்கள் தினமும் 18 ஆயிரம் பன்னிரு திருமுறைகளை முற்றோதுகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

    திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இக்கோயிலில் அமைந்துள்ள மலை கோயிலில் தோணி யப்பர் ,உமாமகேஸ்வரி சட்டநாதர் ஆகிய சுவாமிகள் மூன்று நிலைகளில் காட்சி தருகின்றனர்.

    திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 24ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி நடைபெறும்.

    திருப்பணிகளை அடுத்து யாகசாலை அமைப்பதற்கு மேற்கு கோபுரம் வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் வெட்டிய போது 493 தேவாரம் தாங்கிய செப்பேடுகள் மற்றும் 22 ஐம்பொன் சுவாமி விக்கிர கங்கள் கிடைக்கப்பெற்றது.

    கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறும் போது இவ்வாறு சுவாமி சிலைகள், செப்பேடுகள் கிடைத்த தகவல் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி தருமபுரம் ஆதீனம் ஏற்பா ட்டின் படி திருஞானசம்பந்தர் சந்நிதியில் பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் தொடங்கி நடைபெறுகிறது.

    தமிழகம் எங்கும் உள்ள பலநூறு அடியார்கள் பங்கேற்று 18000 பன்னிரு திருமுறைகளை நாள்தோறும் முற்றோது கின்றனர். இதனை தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.

    அடியார்களுடன் தருமபுரம் ஆதீன மடத்து கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் ஓதுவார் மூர்த்திகளும் பன்னிரு திருமுறைகளை முற்றோதுதலில் பங்கேற்றுள்ளனர்.

    இதில் தமிழ்சங்க தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், திருக்கோவில் பாதுகாப்பு பேரவை பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • அடையாளம் காண முடியாததால் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
    • அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை நகரம் 4-ம் நம்பர் புதுத்தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்து கிடந்தவர் பச்சைநிற கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார்.

    இவர் யார் என்று அடையாளம் காண முடியாததால் கடந்த 3 தினங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க “10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)“8300018666” என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறைஅலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிய–ப்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க "10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)"8300018666" என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட மேலாளர் நாகப்பட்டினம் வாசுதேவன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 10 ஆயிரம் கி.மீ சாலை நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதத்தில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியத்தில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 5500 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ரூ.833 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலை நகர சவாலைகளுடன் இணைக்கும் வகையில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கும்.

    அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறதுபொறுப்பேற்ற மூன்று மாதத்தில் 14,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளச்சாராயம், போதை பொருள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு.
    • பொதுமக்களிடம் மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கொள்ளிடம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு பொதுமக்களிடையே மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதை பொருள் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

    குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அதைவிட பெரிய போதை ஏதும் இல்லை என அறிவுரை வழங்கினார்.

    மேலும் கள்ளச்சார விற்பனை நடைபெற்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை, மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் திரளான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.
    • வாசல் திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை உள்ளே சென்றன.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் சட்டை நாதர் சுவாமி கோவிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது.

    மற்ற கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

    தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

    அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர்.

    40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டி ருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்ப ட்டுள்ளது.

    இதில் தம்பி ரான் சுவாமிகள் மற்றும் கோயில் காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், உபயதாரர் முரளிதரன், வர்த்த த சங்க செயலாளர் துரை, திருமு ல்லை வாசல் கணேஷ், ரவிச்சந்தி ரன், பொறியாளர் செல்வ குமார், முன்னா ள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

    • கடந்த சில நாட்களாக அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை.
    • சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பட்டமங்கலம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக இங்குள்ள பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் குடிநீர் வழங்கதை கண்டித்து மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், மயிலாடுதறை அருகே சீனிவாசபுரம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறினர்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார்.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பேரணியானது ரெயில் நிலையம் வழியாக சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, பைக் ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து,

    நடந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் வாகன ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், ,சீர்காழி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சீர்காழி காவல் இன்ஸ்பெ க்டர் சிவகுமார், தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர்.

    100க்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணிந்த பைக் ஓட்டிகள் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொள்ளிடம் முக்கூட்டு, ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

    இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்த, வீரபா ண்டியன், முத்து, ஜெயா, மற்றும் ராஜா பங்கேற்றனர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குல்பி ஐஸ்கிரீம் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற நிலையில் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன.
    • மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குல்பி ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    தரங்கம்பாடி:

    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன்.

    இவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடை வைத்து குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் இங்கு தயாரிக்கப்படும் குல்பி ஐஸ்கிரீம் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற நிலையில் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து இன்று காலை மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குல்பி ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் ஐஸ்கிரீமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் , மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.
    • ரூ.1500-க்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை மாற்றுத்திறனாளியிடம் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை கிராமத்தில் வசித்து வரும் கதிரேசன் என்பவரின் மகன் சுமன். இவர் 2 கால்களும் செயல் இழந்தவர் (மாற்றுத்தி றனாளி).

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கலெக்டர் மகாபாரதி உட னடியாக மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று, நலம் விசாரித்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1500-ற்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை வழங்கினார்.

    அப்போது தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுந்தரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன்கோயிலில் சொக்கநாதர் பெருமானுடன் எழுந்தருளினார்.
    • தருமபுர ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக பூஜாமூர்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 11-ம் தேதி ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு தரங்கம்பாடி சாலை, மயூரநாதர் சுவாமி கோயில், பட்டமங்கலத்தெரு, வள்ளலார்கோயில் வழியாக பாதயாத்திரையாக திருநன்றியூர் உலகநாயகி சமேத லட்சுமிபுரீஸ்வரர் கோவிலில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தார்.

    12-ம் தேதி மாலை திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வர ன்கோயில் வைத்தியநா தசுவாமி கோயிலில் சொக்கநாத பெருமானுன் எழுந்தருளினார்.

    அங்கு இரண்டு நாட்கள் தங்கி வழிபாடு நடத்திய பின்னர் நேற்று அங்கிருந்து சீர்காழி புறப்பட்டது.

    சீர்காழி நகர எல்லையான உப்பனாற்றாங்கரை வந்தடைந்த குரு லிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் மேடையில் எழுந்தருளினார்.

    100 நாதஸ்வர,மேளம் இசைத்தும், கேரள பாரம்பரிய தெய்வ வேடமணிந்து பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகைபுரிந்து வரவேற்றனர். பின்னர் யானை, ஒட்டகம், குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல தருமபுரம் ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயா த்திரை மேற்கொண்டார்.

    பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் ஆதீனம் வழங்கியவாறு சென்றார். நான்கு தேர் வீதிகளின் வழியாக சட்டநாதர் சுவாமி கோயிலை தருமபுரம் ஆதினம் வந்தடைந்து அங்கு மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர் பெருமானை எழுந்தருள செய்தார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசகதம்பிரான் சுவாமிகள், சிவகுருநாத தம்பிரான்சுவாமிகள், ஆதீன கல்லூரி நிர்வாகத்தினர், சீர்காழி, வைத்தீஸ்வர ன்கோயில் பகுதி பக்தர்கள் உட்பட பலர் சென்றனர்.

    ×