என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு
    X

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 ஆயிரம் கி.மீ சாலை நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதத்தில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியத்தில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 5500 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ரூ.833 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலை நகர சவாலைகளுடன் இணைக்கும் வகையில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கும்.

    அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறதுபொறுப்பேற்ற மூன்று மாதத்தில் 14,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×