என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
- மாணவர்களுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகளை கற்றுக்கொடுத்தனர்.
- மூளைக்கு வேலை, மந்திரமா?தந்திரமா? போன்றவற்றை குறித்தும் கற்றுக்கொடுத்தனர்.
சீர்காழி:
எடமணலில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா அரசினர் உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது.
இதில் பள்ளி தலைமையாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர் கார்த்திக் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ப.தமிழ்ச்செல்வன், பஞ்சாயத்தார் க.அறிவழகன் மற்றும் வார்டு உறுப்பினர் லெட்சுமி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ப.பவஸ்ரீ,ர.ரஞ்சிதா,வி.ரேகா,மு.அலமேலு, கு.கலைவாணி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வானவில் மன்ற கருத்தாளர் மீனாட்சி குழந்தைகளுக்கு எளிய கணித செயல்பாடுகள், அறிவியல் செயல்பாடுகள், மூளைக்கு வேலை, மந்திரமா? தந்திரமா? போன்றவற்றை மிகவும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்தார்கள்.
முடிவில் தன்னார்வலர் பவஸ்ரீ நன்றி கூறினார்.
Next Story






