என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
    • குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார்.

    ஆணையர்(பொ) ஹேமலதா, பொறியாளர் சித்ரா, நகரமைப்புஆய்வாளர் மரகதம், மேலாளர் காதர்கான், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தல் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    சாமிநாதன் (திமுக):

    கொசுமருந்து அடிக்கும் இயந்திரம் கடந்த 6மாதம் முன்பு வாங்கிய நிலையில் வேறொரு இயந்திரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்றார்.

    ரமாமணி (அதிமுக):

    சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்திட வேண்டும்.

    வள்ளி (திமுக)பேசுகையில்:

    எனது வார்டில் இருவரை நாய்கள் கடித்துவிட்டது.

    நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ரம்யா(திமுக):

    17-வது வார்டில் தற்போது 1மின்விளக்கு மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும். 4மின் பம்புகள் பழுதாகியுள்ளது என்றார்.

    தேவதாஸ் (திமுக):

    9-வது வார்டில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது.

    குளத்தின் சறுக்கல் பக்கவாட்டில் கல் பதிக்காததால் மண் சரிந்து பாதிக்கப்படும்.குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    மேல்பூச்சு சிதிலமடைந்துள்ளதால் பணியாளர்கள் உள்ளே இறங்க அஞ்சுகின்றனர்.

    மினிபம்பு அமைத்துதரவேண்டும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கிய அரசுக்கு நன்றி என்றார்.

    வேல்முருகன்(பாமக):

    மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை நிருபயா வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கியதுபோன்ற கடுமையான தண்டைனை வழங்கவேண்டும்.

    மணிப்பூர் சம்பவத்தை கண்டனம் தெரிவிக்கிறோம். தென்பாதி பயணியர் விடுதி அருகே புதிதாக கல்வெர்ட் அமைத்துதரவேண்டும் என்றார்.

    தலைவர் துர்காராஜசேகரன்:

    மாமிச கழிவுகள் கொட்டும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.

    17-வது வார்டில் பள்ளி கட்டடம் கட்ட அரசுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பபட்டு அனுமதி பெற காத்திருப்பில் உள்ளது மணிப்பூர் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்றார்.

    • கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
    • அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்தனர்.

    பேரணிக்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமையில் பேரணி நடை பெற்றது.

    இதில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் சரண்விடுப்பு, அவுட்சோர்சிங், ஒப்பந்த முறை இரத்து செய்தல் அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட தலைமையில் நடைபெறும் கோரிக்கையில் குறிப்பாக அரசாணை152-139-115ஐஇரத்துசெய்ய வேண்டும், அகவிலைபடி நிலுவை, சரண்விடுப்பு வருங்கால வைப்புநிதி வட்டிகுறைப்பு உள்ளிட்ட கொரனா தொற்றுகாலங்களில் பறிக்கபட்ட நிலுவை தொகை வழங்க வேண்டும்.

    சாலைபணியாளர்களின் 41மாத பணி நீக்ககாலத்தை வரன்முறைபடுத்த வேண்டும்.

    மாவட்ட செயலாளர் இளவரசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார் முன்னதாக மேளாண் மாநிலசெயலர் பிரேம்சந்த் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார் இதில் மாவட்ட தலைவர் தென்னரசு, மாவட்ட செயலர்கள் ஜெயராமன்.

    வெங்கடேஸ்வரன், ராமானுஜம், கணேசன், வனிதா, ராமதேவன், ரவீந்தரன், மாவட்டநிர்வாகிகள் துணை தலைவர்கள் ராமசந்திரன் ஜவஹர் லதா மாவட்ட செயலர்கள்சௌந்த ரபாண்டியன், முருகானந்தம் வெங்கடேசன், குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி நிரைவுபெற்றது நிறைவுரையை மாநில செயலர் கோதண்டபாணி உரையாற்றினார். முடிவில்.பொருளாளர் கலா நன்றி கூறினார்.

    • மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கம நிகழ்வு நடந்தது.
    • புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம் ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன் கோவில் முத்துராஜம் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் என்ற நிகழ்வு நடந்தது.

    இதில் நேரடியாக 300 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் காணொளி காட்சி (ஆன்லைன்) வாயிலாக 710 வெளி மாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் என ஒரே நேரத்தில் 10 10 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நேரடியாக 300 நடன கலைஞர்கள் புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம், தில்லானா ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர். ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்காடு நிறுவனத்தலைவர் ஜேக்கப் ஞான செல்வம், மேலாளர் ஸ்ரீனிவாசன், சி.இ.ஓ. எஸ் தர், பிரியா உள்ளிட்டோர் உலக சாதனை என அங்கிகரித்து சீர்காழி சங்கமத்தில் பங்கேற்ற பரத கலைஞர்களுக்கு உலக சாதனைக்கான சான்று மற்றும் பதங்கங்களை வழங்கி பரத கலைஞர்களை பாராட்டினர்.

    இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி தாளாளர் சிவசங்கர், நாடி.ஜோதிடர் சிவசாமி, சதாசிவம்,கலைமாமணி தருமை சிவா, பரதகலை ஞர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கிட்டப்பா அங்காடி அருகில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்பா சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன், கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட கழகத்தினர் பங்கேற்று நீதி வேண்டும் நீதி வேண்டும், மணிப்பூர் பெண்கள் மீது இழைத்த கொடுமைகளுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியும், மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்.

    ஒன்றிய குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, ஆறுபாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி, திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி, மகளீர் அணியினர் டெய்சி, சாந்தி உள்ளிட்ட திரளான மகளிர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

    • சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
    • தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் சாகச சுற்றுலா உண்டு, உறைவிடம் முகாம் நடத்துபவர், முகாம் சுற்றுலா, முகாம் நடத்துபவர்கள், கேரவன் இயக்குபவர், கேரவன் சுற்றுலா நடத்துபவர் ஆகியோர் https://www.tntourismtors.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணை, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு: சுற்றுலா அலுவலகம், பூம்புகாரில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் அல்லது 91769 95843 என்ற செல் நம்பரிலும், www.tourismpoompuhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரதநாட்டிய மாணவிகள் புஷ்பாஞ்சலி, காவடி சிந்து உள்ளிட்ட நடனமாடினர்.
    • ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மயிலை சப்தஸ்வரங்கள் சார்பில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளின் அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் ராகமாலிகா, சண்முகப்பிரியா, நாட்டை, ஆனந்தபைரவி உள்ளிட்ட ராகங்களில் பரதநாட்டிய மாணவிகள் நிகழ்த்திய புஷ்பாஞ்சலி, காவடி சிந்து, தில்லானா உள்ளிட்ட நடனங்கள் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெ ருமாள், ஒன்றிய குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான பார்வை யாளர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை கண்டு ரசித்தனர்.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.
    • அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை போன்றவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் ஊராட்சியில் செருகுடி தியாகராஜன், ஆராயி , பாஸ்கரன் ஆகியோர்களின் வீடு மின்கசிவு காரணமாக முழுவதும் தீபற்றி எரிந்து அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துவிட்டது.

    தகவல் அறிந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அறிமுக செயலாளர் நற்குணன் , தீப்பற்றி எரிந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ5000 பணமும், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழரசி ரூ.2000 பணமும் நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை, பாய் போன்றவைகள் வழங்கினார்கள்.

    உடன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம்,பாஸ்கரன், பூவராகவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் உத்திர.ராஜேஷ், பங்கேற்றார்.

    • மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அருண்ராஜ் (வயது 24). இவர் நேற்று இரவு சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கம்பியால் தாக்கியும் தப்பித்து சென்றுள்ளனர்.

    தலை மற்றும் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் கீழே சரிந்த அருள்ராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்திற்கான காரணம் தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளைஞரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆக்கூரில் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீதளா தேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடிப்பூர வளையல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல வண்ண நிறத்தில் பல்லாயி ரக்கணக்கான வளைய ல்கள் அணிவித்து ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. வழிநெடுகம் பக்தர்கள்தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    அரசு பள்ளி மாணவன் மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் என்ற வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழர் கலைஞரின் சுவடுகள்"என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது.

    மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கட்டுரை போட்டியில் கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு பள்ளி 12-ம் வகுப்பு சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் முருகன் மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    இவருக்கு மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு மாணவர் முருகனுக்கு 2-ம் பரிசான ரூ. 7000 ரொக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவர் முருகனை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ் ஆசிரியர் சாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    • ஆடிப்பூர திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடே ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது . பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்த ருளினார்.

    இதனையடுத்து மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் தி.மு.க. செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்கா ணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் களியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • 100 கிலோ மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

    இதனை தொடர்ந்து மண்டலபிஷேகம் பூர்த்தி விழா மூன்று நாட்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நிறைவு நாளான நேற்று காலை முத்து சட்டநாத சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக எதாஸ்தானத்தி லிருந்து முத்து சட்டை நாதர் சுவாமி புறப்பாடாகி உற்சவம் மண்டபம் எழுந்தருளி சிறப்பு ஆராதனை நடந்தது.

    பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் குத்து சட்டை நாதர் சுவாமி எதார்த்தம் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது . தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு நாதஸ்வர மேளக்கச்சே ரியுடன் சுவாமி பிரகார விழா நடந்தது .

    தொடர்ந்து முத்து சட்டை நாதர் சுவாமி சதாஸ்தானம் எழுந்தருளி 100 கிலோ மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்று, பின்னர் மகா தீபாராதனை நடந்தது.

    இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார், தொழி லதிபர் மார்கோனி சியாமளா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிதரன், திருக்கோயில்கள் பாதுகாப்பு பேரவை செய லாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×