தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Published on

தரங்கம்பாடி:

மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கிட்டப்பா அங்காடி அருகில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்பா சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன், கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட கழகத்தினர் பங்கேற்று நீதி வேண்டும் நீதி வேண்டும், மணிப்பூர் பெண்கள் மீது இழைத்த கொடுமைகளுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியும், மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்.

ஒன்றிய குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, ஆறுபாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி, திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி, மகளீர் அணியினர் டெய்சி, சாந்தி உள்ளிட்ட திரளான மகளிர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com