என் மலர்
மயிலாடுதுறை
- பரோலில் வெளிவந்த குருமூர்த்தி கடலூர் மத்திய சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை.
- மணல்மேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 52).
இவர் கடந்த 2002-ம் ஆண்டு கேட்ட பணத்தை கொடுக்காத ஆத்திரத்தில் நண்பர் மதியழகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 2003 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்த குருமூர்த்தி கடலூர் மத்திய சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை. தொடர்ந்து 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குருமூர்த்தியை உளவு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை டிஎஸ்பி. சஞ்சீவ்குமார் தலைமையில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, தனிப்பிரிவு பாஸ்கர் ஆகியோர் அடங்கிய போலீசார் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் குருமூர்த்தி மணல்மேடு போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கலை திருவிழாவில் அனைத்து அரசு பள்ளி, மானவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காளகஸ்தி நாதபுரத்தில் உள்ள தனியார் கலை. அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக கலை திருவிழா போட்டி நடந்துவருகிறது. இந்த கலை திருவிழா போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, மானவ_மாணவிகள் பங்கேற்று வருகிறார்கள். நேற்று 2-ம் நாள் போட்டியில் 11,12, பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இவர்களின் திறமைகளை நடுவர்கள் அமர்ந்து பார்த்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி வந்தனர். இந்த கலை திருவிழாவை மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி தொடங்கி வைத்தார்.
பின்னர் மானவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்மாநில அளவில் நடைபெறும் கலைப் போட்டிகளில்பங்கு பெறுவார்கள் என தெரிவித்தனர்.
இந்த கலை திருவிழாவில், ஏராளமான மானவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டினர்.
- மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
- மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி 2-வது வார்டில் தாழ்வான பகுதியில மழை க்காலங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரஹமத்நிஷா முபாரக், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகர னிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறு த்தலின்படி இரணியன் நகர் பகுதியில் வாய்க்கால் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர் வாரும் பணி தொடங்கியது.
இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் எளிதில் வடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் குமார், பணி மேற்பா ர்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் உடன் இருந்தனர்.
- பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727 உள்ளனர்.
- இந்த வாக்காளர் பட்டியல் அங்கிகரிக்கப்பட்ட அனைத்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் (தனி) ஆண் வாக்காளர்கள் 120559, பெண் வாக்காளர்கள் 122424, திருநங்கைகள் 8 என மொத்தம் 242991, பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727, திருநங்கை 3 என மொத்தம் 264409 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனை த்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.
அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,ம ண்டல துணை வட்டாட்சியர் பாபு, அ.தி.மு.க சார்பில் சுரேஷ்குமார், வக்கீல் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், நெடுஞ்செ ழியன், சரவணன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயரெங்கன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- கோபுர கலசம் மற்றும் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்து ள்ளது. ஆதீன தென்மேற்கு மூலையில் முற்றிலும் கருங்கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் ஒன்றரை டன் எடையுள்ள ஞான விநாயகர் புதிதாக அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனை முன்னிட்டு திருக்கடையூர் மகேஸ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளை நேற்று முன் தினம் தொ டங்கினர்.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்கள் எடுத்து வரப்பட்டு மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசம் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது .
தருமபுரம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்ற கும்பா பிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
- மாதானம் ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே எருக்கூர் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம செயலக கட்டிடம், புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்ட ப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம், மாதானம் ஊராட்சி யில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய 3 புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
விழாவிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ராமலிங்கம் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஊராட்சி தலைவர்கள், காந்திமதி சிவராமன், முத்தமிழ் செல்வி சுப்பையன், வசந்தி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் வாசுகி தலைமை தாங்கினார்.
அப்போது சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து காலமுறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்துறை சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கவலை ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
- 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடமணல்-திருநகரி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் எடமணல் கிராமத்தில் நடைபெற்றது ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடமணல், திருநகரி, வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் தார் பிளாண்ட் தொழிறடசாலையை தடை செய்வதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிப்பது, தார் பிளாண்ட் தடை செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற கேட்டு பெறுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது.
- 52 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலில்(வயது 50).
இவர், வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி சைதா பானு(48) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில அவர் கணவருடன் வசித்து வருகிறார்.
இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சைதாபானு நேற்று அதிகாலை 3 மணிக்கு ரெயிலில் அழைத்துச்சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பினார்.வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு சைதா பானு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சைதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
- 1500 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
- அபயாம்பிகைக்கு தங்கமூலம் பூசபட்ட முழுகவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காவேரி ஆற்றின் தெற்கு நோக்கி 1500 வருடங்கள் பழமையான புகழ் பெற்ற ஸ்ரீ மாயூரநாதர் பெரிய கோவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் மகாதானத்தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செந்தில்நாதன்- முல்லை தம்பதியினர் பல ஆயிரம் ரூபாய் செலவில் அபயாம்பிகை அம்மனுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்களை திருவாவடுதுறை ஆதீனம் 24- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவானதேசிக பரமாச்சாரியர் சுவாமிகளிடம் ஆசிபெற்று வழங்கினர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீஅபயாம்பிகை அம்பாளுக்கு தங்கமூலம் பூசபட்ட முழு கவச ஆபரணங்கள் அணிவிக்கபட்டது. நிகழ்ச்சியின் போது கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.
- இசை பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில்அமைந்துள்ளது.
திருஞான சம்பந்தர் தேவாரத்தில் முதல் பதிகமான தோடுடைய சிவனே என்ற பதிகத்தை பாடி அருளிய தலமான இங்கு நவராத்திரி இசை விழா ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் இசை பள்ளி சார்பில் நடைபெற்று வருகிறது.
அதுபோல இவ்வாண்டு நவராத்திரி இசை விழா நடைபெற்றது.
இசை பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டு தேவார பதிகங்கள், விநாயகர் துதி, சரஸ்வதி பாடல் உள்ளிட்ட பக்தி பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் பாடினர்.
இதில் குறிப்பாக 4 வயது முதல் மழலைச் சொல் மாறாத சிறுவர் சிறுமியர் இசை விழாவில் கலந்து கொண்டு இசைக்கு ஏற்ப பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இவ்விழாவில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
- மீதமுள்ள ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கேட்டுள்ளார்.
- போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன், தொழில் அதிபர் இவர் தனது நண்பர் தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் என்பவர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவரிடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
மேலும் ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில் ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார்.
தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் மூலம் வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி இது குறித்து திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்று கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தலைம றைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






