என் மலர்
மதுரை
- கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக்குழுவினரிடம் வழங்கி வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவணன், நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ராஜ்சத்யன், நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ், சோழவந்தான் கருப்பையா, திரவியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல. கந்தசஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே இங்கு கந்தசஷ்டியின்போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணத்துக்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ரூ.1,000, ரூ.2,000 என வசூலித்தால், ஏழை பக்தர்கள் நிலை என்ன ஆகும்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கோவில்கள் இருக்கிறதா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
- மதுரையில் 2 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் தவித்தன.
- சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து 2 இண்டிகோ விமானங்கள் இன்று 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தன.
மதுரையில் கனமழை பெய்து வருவதால் 2 விமானங்களும் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இரு விமானங்களும் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழையால் நடுவானில் வட்டமடித்துக்கொண்டிருந்த இரு இண்டிகோ விமானங்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.
- மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
- தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.
மதுரை:
மதுரை புதுமாகாளிபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தற்போது பெரும்பாலான மூத்த குடிமக்கள், பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளால் எந்த பாதுகாப்பும் கிடைக்காமல் உள்ளனர். இதனால் தனி மையில் வசிக்கும் பல முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு, மூத்த குமடிக்கள் மற்றும் பெற்றோர் நல விதி முறைகளை 2009-ம் ஆண்டில் ஏற்படுத்தியது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த குடிமக்கள், பெற்றோர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரியும், தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

குறிப்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். மேலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மூத்த குடிமக்களை போலீஸ் நிலைய அதிகாரி சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இதற்காக அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால் முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர். எனவே ஐகோர்ட்டு மதுரை கிளை எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களின் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இந்த விதிமுறைகளை கடைபிடித்து மூத்த குடிமக்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
- மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.
- உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தி வரை 3 நாட்களுக்கு அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.
மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
- என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
மதுரை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்ற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் அதிக வருமானம் வரும் என்றும், எனவே அதில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார். நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பல முறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றேன்.
அப்போது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார் என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கைகள் இல்லை. எனவே என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டுத்தர வேண்டுமென புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.
- ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்.
- திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை.
மதுரை:
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை ஒரு வாரம் நடத்த உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில சுயாட்சி பறிக்கப்படும்; கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும்.
கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்த பின்பும் மத்திய அரசு இன்னும் புதிய கவர்னரை நியமிக்கவில்லை; மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் நபரை மத்திய அரசு கவர்னராக நியமிக்க வேண்டும். சிபிஎம்ஐ பொறுத்தவரை கவர்னர் பதவி தேவை இல்லை. தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை. அதிமுக பாஜக கூட்டணியின்போது தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி காவு கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை, கோரிக்கையை நிறைவேற்ற சொல்வதில் என்ன குழப்பம். மத்திய அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளன.
- நித்தியானந்தாவின் சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா?
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுரேகா என்பவர் நித்தியானந்தாவின் சீடராக இருக்கிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "கணேசன் என்பவருக்கு சொந்தமான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக சுரேகா, தர்மலிங்கம் மற்றும் ரவி ஆகியோர் மீது தேனி மாவட்டம் சேத்தூர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் நாங்கள் அது சம்பந்தமான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.பொய்யான புகாரில் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எனது மனுதாரர் நிலத்தை அபகரிக்கும் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு, ஆகவே அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.
புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நிலத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கனவே நித்தியானந்தா வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூர் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நித்தியானந்தாவின் சீடர் கணேசனை பயமுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தலைமறைவாய் இருக்கும் நித்தியானந்தா இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார். நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ளன. நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மனுதாரர் இனிமேல் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் நாளை தாக்கல் செய்தால் அவருக்கு முன்ஜாமின் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
- குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்.
- ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம்.
நான்கு பல்கலைக்கழங்கள் மீது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
ஆவணம் தர தாமதித்தால் பல்கலைக்கழங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப் 1 தேர்வில் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விவரம் அளிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர்.
பல்கலைக்கழங்கள் ஆவணங்களை தர மறுத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம்.
- வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக 29-ந்தேதி மாலை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க.வி.ன் அதிகார துஷ்பிரயோகத்தால் அ.தி.மு.க. கொடியை கூட ஏற்றுவதற்கு எதிர்நீச்சல் போடும் நிலை உள்ளது.
இந்த மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும். வருங்கால முதலமைச்சராகும் எடப்பாடியாருக்கு மதுரை நகரமே திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை.
- நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மதுரை:
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் கோ.தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் இந்த முறை மதுரை பாராளுமன்ற தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.
ஆனால் கட்சி தலைமை மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி அப்போதைய அமைச்சரும், தற்போதைய துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒத்தக்கடை பகுதியில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் வெங்கடேசன் எம்.பி.யும் கலந்து கொண்டார்.
பின்னர் கடந்த 7-ந்தேதி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசுகையில், 10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தார்கள். ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பட்டா கொடுக்காமலும், அதுதொடர்பாக அரசாணை வெளியிடாமலும் இருக்கிறார்கள் என தி.மு.க. அரசை விமர்சித்தார்.
பட்டா கேட்டு நடத்திய இந்த பேரணி பட்டா வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய அமைச்சருக்கு எதிராக உள்ளதோ என கருதி, மதுரை தி.மு.க.வி.னரும், அமைச்சரின் ஆதரவாளர்களும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினருக்கு எதிரான கருத்துகளை சமூகவலை தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையே அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனி்ஸ்ட் கட்சி சார்பில் கிளை மாநாடு நடந்தது. அதில் வண்டியூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும், ரேசன் கடைகளில் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் கூறி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி அதனை வண்டியூர் பகுதியில் பேனராகவும் வைத்தனர்.
இதனையடுத்து ஓரிரு நாட்களில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வண்டியூர் பகுதி முழுவதும் கண்டா வரச்சொல்லுங்க...! என்ற வாசகத்துடன் மதுரை வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டன. இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரிடையை கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஒன்றிய மாநாட்டில் வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், வண்டியூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும், ரேஷன் கடையில் தரமான பொருள் வை என்றால் ஒருத்தனுக்கு கோபம் வருகிறது என்றால் தரம் இல்லாத பொருளை எடை குறைவான பொருளை போடுபவனுக்கு பின்னால் இருக்கும் நபருக்கு தான் வரும்.
மக்களுக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள், எங்களை விட சிறந்த போராட்டக்காரர்களாக இருந்தால் எங்களோடு வாருங்கள் போட்டி போடலாம் என சவால் விடுத்தார்.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுரையில் மீண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விரைவில் பட்டா வழங்க இருக்கிறார்கள். இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிடுங்கள்.
தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரசாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் செய்து வருகிறார். நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது.
கிடைக்காததை கிடைக்கும் என்றும், வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவு செய்து நீங்கள் நம்பி ஏமாந்து விடவேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத்துறையும், அதிகாரிகளும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை, நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கூட்டங்களில் அவன், இவன் என மேடையிலேயே ஒருமையில் சவால் விடுத்து பேசும் வகையில் ஒருவரை ஒருவர் சாடி வருவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிடமும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
- தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
- 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-
சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
என் தரப்பிலிருந்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய இயலவில்லை. தற்போது நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் விசாரணை நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இது நியாயமான விசாரணையை மறுக்கும் வகையில் உள்ளது. ஆகவே கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தத.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் மாஜிஸ்திரேட் அளித்த சாட்சியம் 100 பக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பலமுறை வாய்ப்பளித்தும் ரகு கணேஷ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. ஆகவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
ரகு கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். எனவே அதற்கு அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார்.
அப்போது நீதிபதி கூறுகையில், 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள். திறந்த நீதிமன்றத்தில் தான் நீதிபதி சாட்சியும் அளித்துள்ளார். அவ்வாறு இருக்கும்போது மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த கேட்பது வழக்கை இழுத்தடிக்கும் மாதிரி உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கோரி தீர்ப்புக்காக வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.






