என் மலர்
மதுரை
- மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்.
- மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தங்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை முயற்சியை மேற்கொள்வோம் என சின்ன உடைப்பு மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சட்ட விதிகளை பின்பற்றி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என நீதிபதி மாலா உத்தரவிட்டுள்ளார்.
மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை கையகப்படுத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சின்ன உடைப்பு கிராம போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
- அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி ?
- எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விளக்கம்.
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
அரிட்டாபட்டி கிராமம், கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இந்த கிராமப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன.
அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக, மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது என்பது குறித்தும் அது எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது.
- தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ் மொழியின் சிறப்பு மிக்க எழுத்தாக சிறப்பு ழகரம் உள்ளது.
அரசு தொடர்பான அரசாணைகளில் ஸ்டேட் கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு எனக் குறிப்பிடப்படுகிறது. இது 'டமில் நடு' என தவறாக உச்சரிக்கும் வகையில் உள்ளது. ஆகவே சிறப்பு ழகரம் இடம்பெறும் வகையில் ஆங்கிலத்தில் 'எல்' என்பதற்கு பதிலாக 'இசட்' என திருத்தம் செய்யக்கோரி கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்தேன்.
நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.
ஆகவே அரசின் சுற்றறிக்கைகளில் ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்ற எழுத்திற்கு பதிலாக 'இசட்' என்ற எழுத்தை திருத்தம் செய்து பயன்படுத்தவும், மேலும் சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை கொண்டு தமிழ்நாட்டிற்கென கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்பதை 'இசட்' என திருத்தம் செய்ய ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
எனவே இந்த விவாகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுங்கள் என கூறிய நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
- இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை:
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபி ஆச்சார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:-
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் கோவில் முழுவதும் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. கோவில் சன்னதி முதல் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் வரை தெரு நாய்கள் வந்து படுத்து கிடக்கின்றது. வரக்கூடிய தெரு நாய்கள் கோவிலுக்குள் அசுத்தம் செய்வதால் ஆகம விதிபடி அதை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதுடன், சில நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்க அமைகின்றது.
மேலும் சிலர் பக்தர்கள் என்ற போர்வையில் மது அருந்தி குடித்துவிட்டு கோவிலுக்குள் உள்ளே வந்து படுத்து கிடக்கின்றனர். இதனால் கோவிலின் ஆகம விதிகள் மீறப்படுகிறது. எனவே கோவில் சன்னதியின் புனிதத்தை காக்கும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பு சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் நாய்களை உள்ளே வரவிடாமல் தடுத்தும் கோவிலில் புனித காக்க வலியுறுத்தி மாநகராட்சி மற்றும் கோவில் உதவி ஆணையரிடம் மனு அளித்திருந்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜம்புகேஸ்வரர் கோவிலில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், கோவிலுக்குள் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர், கோவில் இணை ஆணையர், திருச்சி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் இணைத்து இந்த வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
- ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி எழில்மலையின் மருமகனும், பிரபல வக்கீலுமாக இருந்தவர் காமராஜ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு, காமராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விசாரித்து முடிக்க கெடு விதிக்கும்படி கொலையுண்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், காமராஜ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. இன்று (19-ந்தேதி) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் இந்த வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
- அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது.
- இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டர் பகுதியில் தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத் தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி நிற்கும் இடம்.
குளங்கள், நீர்சுனைகள், ஊற்றுகள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் என தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மை யமிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது.
இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது.
மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டிலியலிட்டு அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு.
கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய பா.ஜ.க. அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பரப்பிலான பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளது. மத்திய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறேன்.
- நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது.
- நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
மதுரை:
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு பிரச்சனை மதுரை சின்ன உடைப்பு ஊரில் உள்ள 164 வீடுகளுக்கு காலி செய்ய சொல்லி விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக இப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர்.
இதையறிந்து பொதுமக்கள் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, தாசில்தார்கள் விஜயலட்சுமி, சுரேஷ் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் இன்குலாப் முனியாண்டி, மள்ளர் சேனை நிறுவனத் தலைவர் சோலை பழனிவேல் ராஜன் ஆகியோர் பேசினர். அப்போது வீடுகளை காலி செய்ய வருகிற சனிக்கிழமை வரை அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று அதிகாரிகள் வரும் ஒரு வாரம் வரை அவகாசம் அளித்துள்ளனர். இதனால் இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்தது. போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறுகையில், சின்ன உடைப்பு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் இடத்தை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகை தொடர்பாக கிராம மக்கள் மனு அளிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும், மாற்று நிலம் வழங்க முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிலம் வழங்க முடியும் என்றார்.
இதனிடையே நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
- மக்களுக்கு தேவையான ஒரு நல்ல திட்டம் கூட தி.மு.க. அரசு செய்யவில்லை.
- விளம்பரத்தில் மட்டும் தி.மு.க. வேற லெவலில் உள்ளது.
மதுரை:
மதுரை ஓபுளா படித்துறை பகுதியில் அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகையும், அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராம் பங்கேற்று பேசியதாவது:-
சமூக நீதி சமூக நீதி என சொல்லும் தி.மு.க. சிறுபான்மையினருக்கு என்ன செய்துள்ளது. தனுஷ் நயன்தாரா பிரச்சனை இன்று விவாத மேடையில் செல்கிறது அதுவா நாட்டிற்கு முக்கியம். நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன, திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன. தனுஷ் கூட சண்டை போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன.
இது தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இன்று போதைப் பொருள் ஒரு சாக்லேட் போல சாதாரணமாக அனைத்து மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது. மதுரையில் சாலைகள் மோசமாக இருக்கிறது.
எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. படித்த திறமை வாய்ந்த ஒரு அமைச்சர் மதுரையில் இருந்தார். அவரும் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்று விட்டதால் மதுரை மக்கள் தி.மு.க. ஆட்சியில் திண்டாடி வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. அறிவித்த ஆயிரம் ரூபாய் எல்லா பெண்களுக்கும் போய் சேர்வது கிடையாது.
பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்றால் அது தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம் என மக்கள் பயன்பெறும் திட்டத்தை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி விட்டனர். மக்களுக்கு தேவையான ஒரு நல்ல திட்டம் கூட தி.மு.க. அரசு செய்யவில்லை.
சத்துணவு திட்டம் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். தற்போது காலை உணவு திட்டத்தில் எந்த ஒரு தரமும் இல்லை. பொங்கல் பரிசு எடப்பாடி ஆட்சியில் வாரி வாரி கொடுத்தார். கடந்த பொங்கலுக்கு தி.மு.க. கொடுத்த அரிசி பொங்கல் தொகுப்பில் புழுக்கள் இருந்தன. விளம்பரத்தில் மட்டும் தி.மு.க. வேற லெவலில் உள்ளது. மக்களுக்கான திட்டங்களில் செயல்பாடுகளில் ஒன்றும் இல்லை. உதயநிதி ஒரு செங்கலை வைத்து எல்லாரையும் ஏமாற்றி விட்டார். 2026-ம் ஆண்டு தி.மு.க.வை மக்கள் நிச்சயமாக வீட்டிற்கு விரட்டி அடிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக வஜ்ரா வாகனத்துடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் வீட்டில் இருப்பதாகவும் கூறி, காலம் கடத்தினார்.
- தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
மதுரை:
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ராஜன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது மனைவி கடந்த 2021-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அதே ஆண்டு நவம்பர் 6-ந் தேதி தென்காசி முடியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றேன். அப்போது அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர், என் மனைவியை பரிசோதித்தார். சில மணி நேரத்துக்கு பின்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் வீட்டில் இருப்பதாகவும் கூறி, காலம் கடத்தினார்.
என் மனைவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ரத்தப்போக்கு ஏற்பட்டு, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். என் மனைவி உடல் நிலை மிக மோசமானதால், அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்து, 60 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் குணமாகாததால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
இதனிடையே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மனைவிக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக மலக்குடலை கத்தரித்தது தெரியவந்தது. இதனால் அவர் கடும் அவதிக்கு ஆளானார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரின் அலட்சியத்தால் ஏராளமான பணத்தையும் செலவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளானோம். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கே.ஆர்.பாரதி கண்ணன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
- மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது.
- வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இந்த வழக்கில் மனுதாரர் 20 வயதானவர். இவரும் 19 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சந்தித்தபோது இரவு வெகு நேரம் பேசியுள்ளனர். அப்போது மனுதாரர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி மனுதாரர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில் காதலிக்கும், இருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் எந்த விதத்திலும், இந்திய தண்டனை சட்டம் 354-ஏ(1) உட்பிரிவின் கீழ் குற்றமாக அமையாது. எனவே மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே மனுதாரர் மீது நடவடிக்கைகளை தொடர்வது, சட்ட துஷ்பிரயோகமாக அமையும். இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையினர் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கையும், வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது. ஆகவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும், கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
- அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.
இதற்கிடையே, மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில் கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெலுங்கு மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான். அவர்களை எப்படி பிரித்துப் பார்க்க முடியும்? கஸ்தூரியின் பேச்சை இணைய தளத்தில் இருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும், அரசியல் உள் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன் என கஸ்தூரி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது. பிறருக்கு இது ஒரு பாடமாக அமையும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முன் ஜாமின் வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.






